தஞ்சாவூர், ஆக.21 - இந்திய அஞ்சல் துறை சார்பில், தஞ்சாவூர் அஞ்சல் கோட்டத்தில் மாவட்ட அள விலான தபால் துறை கண் காட்சி வரும் அக்டோபர் மாதம் 8 ,9 தேதிகளில், தஞ்சை தமிழ்ப் பல்க லைக்கழக வளாக கரிகாற் சோழன் கலையரங்கத்தில் நடைபெற உள்ளது. அதனொரு பகுதியாக இந்திய தபால் துறை மற்றும் சோழமண்டல வரலாற்றுத் தேடல் குழு இணைந்து, மாந கராட்சி மேல்நிலை பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மரபு நடை நிகழ்ச்சி, சிவகங்கை பூங்காவில் இருந்து தஞ்சை பெரிய கோயில் வரை நடை பெற்றது. களஞ்சியம்-79 தபால் துறை கண்காட்சியின் சின்ன மான “டுகாங்” என்னும் கடல் பசுவின் சின்னம் அனைவ ருடைய பார்வைக்கும் வைக்கப்பட்டிருந்தது. தஞ்சை பெருவுடையார் கோயிலின் சிறப்புகளையும், முக்கியமான கல்வெட்டுக ளையும் சோழமண்டல வர லாற்றுத் தேடல் குழு தலை வர் டாக்டர் உதயசங்கர் பள்ளி மாணவர்களுக்கு தெளிவாக விளக்கினார். பள்ளி மாணவர்கள் அனை வரும் ஆர்வமுடன் கேட்ட றிந்தனர். நிறைவில், பள்ளி மாண வர்கள் முன் தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவில் தபால் தலை வெளியிடப்பட்டது மற்றும் தபால் தலை சேக ரிப்பு பற்றியும் எடுத்துரைக் கப்பட்டது. மாவட்ட அளவிலான தபால் துறை கண்காட்சி களஞ்சியம் 79 சின்னம் பொறித்த தொப்பிகள் மாண வர்களுக்கு பரிசாக வழங்கப் பட்டது. மாணவர்கள் அனை வரும் நடக்கவிருக்கும் களஞ்சியம் தபால்தலை கண்காட்சியைக் காண மிகவும் ஆவலாக இருப்ப தாக தெரிவித்தனர் இதில், முதுநிலைக் கோட்ட அஞ்சல் கண்கா ணிப்பாளர் கு.தங்கமணி மற்றும் அஞ்சல் துறையினர் நிகழ்வில் பங்கேற்றனர்.