திண்டுக்கல், நவ.25- திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தை வழக்கறிஞர் முற்றுகையிட்டதையடுத்து வாயில் கதவு மூடப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அது பற்றிய விவரம் வருமாறு: திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர் வரதராஜன். இவர் வடமதுரையில் மருந்து கடை நடத்தி வருகிறார். இவரது மருந்து கடையில் வேலை பார்த்த ஷேக் என்பவர் சில நபர்களு டன் சேர்ந்து வரதராஜனை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்கறிஞர் வரத ராஜன் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது, அவரை தாக்கி யவர்கள் கொடுத்த பிசிஆர் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவின் கீழ் கொடுக்கப் பட்ட புகாரைப் பெற்றுக் கொண்டு வழக்கு பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கை உடனே வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி திண்டுக்கல் வழக்கறி ஞர் சங்கம் சார்பாக திங்களன்று மனுநீதி நாளில் திண்டுக்கல் ஆட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட முடிவு செய்யப் பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர்களின் போராட்டத்தை அடுத்து திண்டுக்கல் ஆட்சி யர் அலுவலகம் பரபரப்படைந்தது. போலீ சார் உடனடியாக ஆட்சியர் அலுவலக வாயில் கதவுகளை மூடினர். இதனை அடு த்து வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் குமரேசன் மற்றும் செயலாளர் கென்னடி ஆகியோர் தலைமையில் வழக்கறிஞர்கள் அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் அனை வரும் பின்புற வாசல் வழியாக அலுவல கத்துக்குள் சென்று தங்கள் பணிகளை துவங்கினர். வழக்கறிஞர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தினர். வரதராஜன் மீது பிசிஆர் வழக்குப் பதிவு செய்த சப் இன்ஸ்பெக்டர் சித்திக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இதனால் ஆட்சியர் அலுவலகம் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.