தஞ்சாவூர், ஜூலை 22- பூவாளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி அண்மையில் மறைந்த த.அமுதா படத்திறப்பு திங்கட்கிழமை நடைபெற்றது. இவர், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பொன்ன வராயன் கோட்டை ஹவுசிங் யூனிட்டில் வசித்து வருபவர் தமிழய்யா என்ற தமிழரசன். இவரது மனைவியும், தமிழ் அமுதன் மற்றும் அமுதரசன் தாயாரும் ஆவார். இந்த நிகழ்வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.தமிழ்ச்செல்வி படத்தை திறந்து வைத்து புகழஞ்சலி உரையாற்றினார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பெஞ்சமின், முருக.சரவ ணன், சாமிநாதன், மோரிஸ் அண்ணாதுரை, விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் தமிழ்ச்செல்வன், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் மகாலிங்கம், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க செயலாளர் கல்யா ணம், மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கம் குலோத்துங்கன், கிளைச் செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் கட்சியி னர், குடும்பத்தினர், உறவினர்கள் கலந்து கொண்டனர்.