புதுக்கோட்டை, அக்.23 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவரங்குளம் மேற்கு ஒன்றியச் செயலாள ராக எல்.வடிவேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் மேற்கு ஒன்றிய 24ஆவது மாநாடு புதன்கிழமை வம்பன் நால்ரோட்டில் நடைபெற்றது. தோழர்கள் எஸ்.ராஜ சேகரன் (முன்னாள் எம்எல்ஏ), வி.அண்ணா மலை, எஸ்.ரெகுநாதன் ஆகி யோர் நினைவரங்கில் நடை பெற்ற மாநாட்டிற்கு வம்பன் செபா, வி.கலைச்செல்வி, எஸ்.அருள்தாஸ் ஆகி யோர் தலைமை வகித்தனர். முன்னாள் ஒன்றியச் செய லாளர் சி.ஜனார்த்தனன் கொடியேற்றினார். ஒன்றியக் குழு உறுப்பினர் பி. கனகராஜ் வரவேற்றார். மாநாட்டை தொடங்கி வைத்து மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர் உரையாற்றினார். வேலை அறிக்கையை ஒன்றியச் செயலாளர் எல்.வடிவேல், வரவு-செலவு அறிக்கையை ஒன்றியக் குழு உறுப்பினர் ஏ.ஆர்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்வைத்தனர். மாநாட்டில் 17 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. ஒன்றியச் செயலாளராக எல். வடிவேல் தேர்வு செய்யப் பட்டார். மாநாட்டை நிறைவு செய்து மாநிலக்குழு உறுப் பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ சிறப்புரையாற்றி னார். ஒன்றியக்குழு உறுப் பினர் ஏ.சரவணன் நன்றி கூறினார்.