மயிலாடுதுறை, மார்ச் 24 - இயேசு கிறிஸ்து ஒரு கழு தையின் மீது அமர்ந்து எருச லேம் நகருக்குள் சென்றதை குறிக்கும் வகையில், உல கெங்கும் உள்ள கிறிஸ்த வர்களால் குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்களால் தவக்காலத்தில் கடைசி ஞாயிறு தினத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, ஞாயிறன்று தரங்கம்பாடி மற்றும் பொறையாரில் குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிக்கப்பட்டது. தரங்கம்பாடி புனித தெரசா மகளிர் அறிவியல் கல்லூரி யில் இருந்து தொடங்கிய ஊர்வலம், முக்கிய வீதி வழியாக சென்று தரங்கம்பாடி கடைத் தெருவை அடைந்தது. இதில் சபை குருக்கள் அருள் ஆனந்த், சாம்சன் மோசஸ், பிரின்ஸ் தங்கதுரை, பிஷப் ஜான்சன் மேல்நிலைப் தலைமை ஆசிரியர் ஜான்சைமன் ஆகி யோர் கலந்து கொண்டனர். பொறையாரில் நடைபெற்ற குருத்தோலை பவனியில், சபைகுரு ஜான்சன் மான்சிங், தரங்கம்பாடி சீகன்பால்க் அருங்காட்சியக இயக்குநர் சாமுவேல் மனுவேல், பேரா சிரியர் ஜோயல் எட்வின்ராஜ், சபை சங்க பொருளாளர் பாஸ்கர், சம்பத், கவுன்சிலர் ஜோனஸ் எப் செல்லப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.