கும்பகோணம், ஏப்.23- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சாரங்க பாணி கோவில் சித்திரை தேரோட்டம் செவ்வா யன்று நடைபெற்றது. கும்பகோணம் சாரங்க பாணி கோவில் சுமார் 2 ஆயி ரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் ஆகும். 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்தபடியாக வைணவ கோவிலாக இந்த கோவில் போற்றப்படுகிறது. இந்த ஆண்டு சித்திரை திருவிழா ஏப்.15 அன்று கொடியேற்றத்துடன் தொ டங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தே ரோட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. 110 அடி உயர மும் 500 டன் எடையுள்ள தேர், தேரடியிலிருந்து புறப்பட்டு, தெற்கு வீதியாக வந்த போது தேரின் முன் சக்கரம் பாதாளச் சாக்கடை பகுதியில் சிக்கியது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் தேரோட்டம் நின்றது. தேரோட்டத்தை காண வந்த பக்தர்களின் வசதிக் காக மாவட்ட மற்றும் மாநக ராட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து அடிப்படை வசதி களும் செய்யப்பட்டன. பாது காப்பு பணியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.