districts

ஓய்வூதியர்கள் வீட்டிலிருந்தே டிஜிட்டல் உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்கலாம்

கும்பகோணம், ஆக.31 தமிழ்நாடு அரசு ஓய்வூதி யர்கள் குடும்ப ஓய்வூதியர்கள் தபால்காரர்கள் மூலம் வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்கலாம் என கும்பகோணம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரி வித்துள்ளார்.  இதுகுறித்து கும்பகோணம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கும்பசுவாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: தமிழக அரசு இந்த ஆண்டு  சுமார் 7 லட்சத்து 198 ஓய்வூதிய தாரர்களை தங்கள் உயிர் வாழ்  சான்றிதழை சமர்ப்பிக்க உத்தர விட்டுள்ளது. இதனால் அலுவல கம் சென்று ஓய்வூதியதாரர்கள் தங்கள் உயிர்வாழ் சான்றிதழ் களை சமர்ப்பிக்க ஏற்படும் சிர மங்களை தவிர்க்கும் வகையில் தபால் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  கடந்த ஜூலை மாதம் 1-ஆம்  தேதி முதல் வீட்டில் இருந்தபடியே  தங்களது உயிர்வாழ் சான்றி தழை டிஜிட்டல் முறையில் தபால் காரர்கள் மூலம் சமர்ப்பிக்கலாம். இதற்காக தமிழக அரசுக்கும் இந்திய தபால்துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கிக்கும் இடையே கடந்த ஜூன் மாதம் ஒப்பந்தம் கை யெழுத்தாகியுள்ளது.

இதற்கு சேவைக் கட்டணமாக ரூ.70 தபால் காரரிடம் செலுத்த வேண்டும்.  மேலும் ஓய்வூதியதாரர்கள் தங்களது பகுதி தபால்கார ரிடம் ஆதார், மொபைல் எண்,  பி.பி.ஓ.எண் மற்றும் ஓய்வூதிய  வங்கிக் கணக்குஎண், கைவிரல்  பதிவு ஆகியவற்றை செய்தால் ஒரு சில நிமிடங்களில் உயிர்வாழ் டிஜிட்டல் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். இந்திய போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி கடந்த ஆண்டு சுமார் 175  லட்சம் ஓய்வூதியதாரர்கள் வீட்டில்  இருந்தபடியே தங்களது உயிர்  வாழ் சான்றிதழை சமர்ப்பித்துள்ள னர். இந்திய போஸ்ட் பேமண்ட்ஸ்  வங்கி மூலம் 1 லட்சத்து 36 ஆயி ரத்து தபால் நிலையங்களுக்கு வங்கிச் சேவைகளை விரிவுபடுத்தி 7 கோடிக்கும் மேற்பட்ட வாடிக் கையாளர்களுக்கு சேமிப்பு கணக்குத் தொடங்கப்பட்டுள்ளது. கும்பகோணம் கோட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட தபால் நிலை யங்கள் மூலம் ஸ்மார்ட் போன்கள்  மற்றும் பயோமெட்ரிக் சாதனங் களை வழங்கப்பட்டுள்ள 350-க்கும்  மேற்பட்ட தபால்காரர்கள் கிராம அஞ்சல் ஊழியர்கள் மூலம் வங்கி  மற்றும் இதர சேவைகளை வழங்கி  வருகிறது.  எனவே தமிழக அரசு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூ தியர்கள் இந்த வசதியை பயன்படுத் திக்கொண்டு வீட்டில் இருந்த படியே தங்கள் பகுதி தபால்காரர் களிடம் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.