கும்பகோணம், ஜன.6 - கும்பகோணம் அரசுக் கல்லூரி மாணவர் கள் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்பு ணர்வு பேரணியில் பங்கேற்றனர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கலால் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை ஏற்பாடு செய்திருந்த போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் கும்பகோ ணம் அரசினர் கலை கல்லூரியின் (தன் னாட்சி) நாட்டு நலப்பணி திட்டம், யூத் ரெட் கிராஸ் யூத் ரெட் கிராஸ் மற்றும் எஸ்எஸ்எல், ஆர்ஆர்சி, ANTI DRUG CLUB சார்பாக 500 மாணவ, மாணவிகள் பங்கேற்று பொதுமக்க ளுக்கு போதைப் பொருள் ஒழிப்பு விழிப்பு ணர்வை ஏற்படுத்தினர். முன்னதாக கல்லூரியில் குடந்தை அம்மா கலைக்குழு நடத்திய விழிப்புணர்வு கலை நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் அ.மாதவி தலைமை வகித்தார். கலால் மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வை உதவி ஆணையர் மு. இரவிச்சந்திரன் கும்பகோணம் கோட்டாட்சி யர் அலுவலகத்தில் இருந்து பேரணியைத் துவக்கி வைத்தார். பேரணியானது, கும்பகோணம் முக்கிய வீதிகள் மற்றும் சரஸ்வதி பாடசாலா பள்ளி வழி யாக வந்து காந்தி பூங்காவில் முடிவுற்றது.