பொதுக் கழிப்பறை அமைக்க கோரிக்கை
பொன்னமராவதி, ஆக.6 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமரா வதி நகரின் மையப் பகுதி யில் அரசு அலுவலகங் களான பேரூராட்சி, அஞ்சலகம், பத்திரப் பதிவு, நீதிமன்றம், காவல் நிலையம், கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் பிரசித்தி பெற்ற கோவில்கள் அருகருகே அமைந்திருக்கின்றன. இங்கு ஆயிரக்கணக் கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மேற் கண்ட அலுவலகங்களில் முறையாக கழிப்பறை வசதிகள் இல்லாததால், அப்பகுதியில் சுகாதார மான பொது கழிப்ப றையை உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் அமைத்துத் தர வேண்டு மென சிபிஎம் கோரிக்கை விடுத்துள்ளது.
உடும்புக்கறி வைத்திருந்தவர் கைது
தஞ்சாவூர், ஆக. 6 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வனச் சரகத்திற்குட்பட்ட, ஒரத்த நாடு அருகே அரசால் தடை செய்யப்பட்ட அரியவகை வன உயிரி னமான உடும்பு இறைச் சியை ஒருவர் வைத்திருப் பதாக வனத் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பட்டுக் கோட்டை வனச்சரக அலு வலர் ஏ.எஸ்.சந்திரசேக ரன் தலைமையில் அங்கு சென்ற வனத்துறை யினர், சந்தேகத்திற்கிட மான நிலையில் அப்பகுதி யில் நின்றிருந்த ஒரு வரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், ஓரத்தநாடு அண்ணா நகரைச் சேர்ந்த ராமு (56) என்பதும், அவர் தடை செய்யப்பட்ட அரிய வகை வன உயிரி னமான உடும்பைக் கொன்று, சுமார் 2 கிலோ எடையுள்ள அதன் இறைச் சியை பையில் மறைத்து வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து மேல் விசாரணைக்காக பட்டுக் கோட்டை வனச் சரக அலுவலகம் அழைத்து வரப்பட்ட ராமு மீது வழக்குப் பதியப்பட்டு, ஒரத்தநாடு மாஜிஸ்திரேட் (பாபநாசம் கூடுதல் பொ றுப்பு) முன்பு ஆஜர்படுத் தப்பட்டார். நீதிபதி உத்த ரவின்படி தஞ்சாவூர் கிளைச் சிறையில் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். பறி முதல் செய்யப்பட்ட உடும்புக்கறி மண்ணில் புதைத்து அழிக்கப்பட்டது.
தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா
பாபநாசம், ஆக.6- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அழ கிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றத் தொ டக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளிச் செயலர் வரதராஜன் தலைமை வகித்தார். தலைமைச் செயலர் கலியமூர்த்தி, நிர்வாகச் செயலர் கைலாசம், நிதிச் செயலர் பொம்மி ஆகி யோர் முன்னிலை வகித்த னர். சென்னை உயர் நீதி மன்ற வழக்குரைஞர் மதி வதனி மன்றத்தை தொ டங்கி வைத்து பேருரை யாற்றினார். 10, 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தமிழில் முதல் மதிப்பெண் பெற்ற மாண வர்களுக்கு அறங்கா வலர் தங்கராசு நினை வாக, அறங்காவலர் திரு நாவுக்கரசு பரிசுகள் வழங்கினார்.
மூடப்படாத கழிவுநீர் கால்வாயில் விழுந்த மூதாட்டி படுகாயம்
பொன்னமராவதி, ஆக.6 - மூடப்படாத கழிவுநீர் கால்வாயில் விழுந்ததில் மூதாட்டி ஒருவர் படுகாயமடைந்தார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மகிபாலன்பட்டி மருத்துவ குடிப்பட்டியைச் சேர்ந்த வர் மூதாட்டி அழகம்மாள். இவர் பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் உள்ள தேநீர் கடையில் தேநீர் அருந்திவிட்டு, கீழே இறங்கும்போது மூடப்படாத கழிவுநீர் கால்வாயில் தடுக்கி விழுந்தார். இதில் அவருடைய வலது கால் உடைந்தது. அருகில் இருந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பேருந்து நிலையத்தின் உட்பகுதியில் உள்ள அனைத்து கால்வாய்களும் மூடப்படாமல் உடைந்த நிலையில் இருப்ப தால், பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கின்றன. எனவே, பேரூராட்சி நிர்வாகம் உடனே கால்வாய்களை மூடி பாதுகாப்பாக பராமரிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது.
கும்பகோணம் பகுதி கொள்ளிடம் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க விழிப்புணர்வு
கும்பகோணம், ஆக.6 - டெல்டா மாவட்ட பாசனத்திற்காக அண்மையில் கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையொட்டி, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் அரத்துறை பணியா ளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா பகுதியில் கொள்ளிடம் ஆற்றங் கரையோரம் குடியிருக் கும் மக்களுக்கு, ஆப்த மித்ரா ஒருங்கிணைப்பாளர் மா.கணே சன் மற்றும் கும்பகோணம் ஆப்தமித்ரா குழுவினர் வீடு தோறும் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கும்பகோணம் ஒன்றியம் குடிதாங்கி, நீலத்தநல்லூர், அத்தியூர் ஊராட்சியில் ஆற்றங்கரையோர மக்கள் பாது காப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டது. மாவட்ட பேரிடர் கட்டுப் பாட்டு எண்.1077, மாநில கட்டுப்பாட்டு எண்.1070 குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
டிராவல்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால் லாபம் தருவதாக கூறி ரூ.20 கோடி மோசடி தலைமறைவாக இருந்த உரிமையாளர் கைது
தஞ்சாவூர், ஆக.6 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை, நந்தனம் பகுதியைச் சேர்ந்தவர் ஹக்கீம் (42), இவர் ஃபரீனா டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்நிலையில், தனது டிராவல்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால், லாபத்தில் பங்குத் தொகை தருவதாக வும், ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் 2,500 முதல் பங்குத்தொகை வழங்கப்படும் என விளம்பரப்படுத்தி னார். இதை நம்பி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக் கும் மேற்பட்டோர் சுமார் ரூ.1 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்தனர். இதையடுத்து ஆரம்பத்தில், முதலீடு செய்தவர்களுக்கு பங்குத் தொகையை வழங்கி வந்த ஹக்கீம், கடந்த 2022 ஆம் ஆண்டில், பங்குத் தொகையை வழங்காமல் முதலீட்டாளர்களை ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து பலரும் ஹக்கீமிடம் கேட்ட போது முறையான பதில் அளிக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு, தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரி வில் புகார் அளித்தனர். மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை யினர் விசாரணையை கிடப்பில் போட்டனர். இந்நிலை யில், ஹக்கீம் தனது மனைவி பாத்திமாவுடன் தலைமறை வானார். பிறகு, பாதிக்கப்பட்டவர்கள் பலரும் பல கட்ட ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். தொடர்ந்து மாவட்ட ஆட்சி யர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோரிடம் புகார் மனுக்களை அளித்து வந்தனர். இதை தொடர்ந்து, மாவட்ட குற்றப்பிரிவில் இருந்து, பொருளாதார குற்றப்பிரிவுக்கு கடந்த மாதம் வழக்கு மாற்றம் செய்யப்பட்டது. பிறகு பொருளாதார குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலை மையில், உதவி ஆய்வாளர் செந்தமிழன் ஆகியோர் அடங்கிய குழுவினர் தலைமறைவாக இருந்த ஹக்கீமை தேடும் பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக அய்யம்பேட்டை பகுதியில் ஹக்கீம் குடும்பத்தினர், நண்பர்கள், டிராவல்ஸ் நிறுவனத்தில் பணி யாற்றி நபர்களிடம் விசாரணை நடத்தினர். இதில், ஹக்கீம் கோயம்புத்துார் மாவட்டம் தொப்பம்பட்டி பகுதியில் ஒரு வாடகை வீட்டில் இருப்பதாக தகவல் கிடைத்தது. தொடர்ந்து, ஹக்கீம் இருப்பதாக கூறப்பட்ட பகுதியை காவல்துறையினர் கண்காணித்து வந்தனர். அப்போது, ஹக்கீம் தான் வசித்த தெருவிலிருந்து வெளியே வந்த போது, அவரை கைது செய்தனர். இதை அறிந்த அவரது மனைவி பாத்திமா தலைமறைவானார். அவரை பொருளா தாரக் குற்றப் பிரிவினர் தேடி வருகின்றனர். பிறகு ஹக்கீமை, தஞ்சாவூருக்கு அழைத்து வந்து விசா ரணை செய்ததில் சுமார் 400-க்கும் மேற்பட்டோரிடம் 20 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்தாக தெரிவித்தார். தொடர்ந்து, மதுரையில் உள்ள பொருளாதார குற்றப் பிரிவு நீதிமன்றத்தில், ஹக்கீமை ஆஜர்படுத்தி சிறை யில் அடைத்தனர். மேலும், ஹக்கீமை கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
கட்டுமானப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக குறைக்க வலியுறுத்தல்
திருச்சிராப்பள்ளி, ஆக.6 - கட்டுமானப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக குறைக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் கட்டு மானத் துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யாத தற்கு கண்டனம் தெரிவித்தும், ஒன்றிய அர சின் நிதியை தமிழக கட்டுமானத் துறைக்கு கட்டாயம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். கட்டு மானத் துறைக்கு தனி அமைச்சகம் வேண்டும். கட்டுமானப் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய ஒழுங்குமுறை விற்பனை ஆணையம் அமைத்திட வேண்டும். கட்டுமானப் பொறியாளர்கள் வாழ்வா தாரம் காத்திட பொறியாளர் கவுன்சில் அமைக்க வேண்டும். கட்டுமானப் பொருட் கள் மீதான ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பினர் செவ்வாயன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஒன்றிய அரசுக்கு எதிராக கவன ஈர்ப்பு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில இணைச் செயலாளர் தென்னரசு தலைமை வகித்தார். மண்டல தலைவர் சிவக்குமார், திருச்சி தலை வர் பழனிகுமார், சுதர்சன், சுரேஷ்குமார், சதாசிவம் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மண்டலச் செயலாளர் புருஷோத்தமன் நன்றி கூறினார். போராட் டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.