திருச்சிராப்பள்ளி, அக்.6 - ஆண்டுதோறும் அக்டோபர் 1 அன்று தேசிய தன்னார்வ ரத்த தான தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் வெள்ளிக் கிழமை நடந்த நிகழ்ச்சியில், அதிகமான ரத்த தான முகாம்களை நடத்தி அரசு மருத்துவமனைக்கு ரத்த தானம் வழங்கியதற்காக இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ரத்த தான கழகத்திற்கு அரசு மருத் துவக் கல்லூரி டீன் நேரு பாராட் டுச் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கினார். இதனை மாவட்டத் தலைவர் பா.லெனின், மாவட்டச் செயலாளர் ரெ.சேதுபதி, இளம்பெண்கள் உப குழு அபிராமி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.