சுதந்திர தின விழாவில் முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது பெற்ற தன்னார்வலர் கவின் பாரதியை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா வெள்ளிக்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினார். இந்நிகழ்வில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் து.செந்தில்குமார், நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் ஜோயல்பிரபாகர், உதவித்திட்ட அலுவலர் ஆர்.நமச்சிவாயம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.