districts

திருச்சி முக்கிய செய்திகள்

பள்ளியில் ஆண்டு விழா

பாபநாசம், மார்ச் 13 - தஞ்சாவூர் மாவட்டம்  பாபநாசம் வங்காரம் பேட்டை அரசு உதவிபெ றும் துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற் றது. பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு பாப நாசம் வட்டாரக் கல்வி அலு வலர் ஜெய மீனா தலைமை  வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர் மணிகண்டன் முன்னிலை வகித்தார்.  அரசு பொறியியல் கல்லூரி, அரசு குரூப்ஸ் நிறுவனங்களின் சேர்ம னும், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவருமான திருநாவுக்கரசு பல்வேறு விளையாட்டுப் போட்டி களில் வென்ற மற்றும்  கலை நிகழ்ச்சிகளில் பங் கேற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் பணி நிறைவுபெற்ற  பள்ளித் தலைமையா சிரியர் கிருஷ்ணமூர்த்தி,  பள்ளி ஆசிரியைகள், பாராட்டப்பட்டனர். 

இ-நாம் மறைமுக ஏலம்

பாபநாசம், மார்ச் 13 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இ- நாம் மறைமுக ஏலம் நடந்தது. இதில் 660 கிலோ கருப்பு கவுனி நெல் ரகம்,  கிலோ ஒன்றிற்கு அதிக பட்ச விலை ரூ.85-க்கும்,  480 கிலோ பழைய சீரக  சம்பா நெல் ரகம் கிலோ ஒன்றிற்கு ரூ.38-க்கும்,  660 கிலோ புதிய சீரக சம்பா  நெல் ரகம் கிலோ ஒன்றிற்கு ரூ.35-க்கும்  விலைப் போனது. இதன் மூலம் ரூ.97,420-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

புதிரைவண்ணார் சமூக மக்கள் கணக்கெடுப்பு பணி

கரூர், மார்ச் 13 -  தமிழகத்தில் முன் னோடி முயற்சியாக புதிரை வண்ணார் சமூக மக்க ளின் கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட உள்ளது. தமிழக அரசின் ஆதி திராவிடர் நலத்துறையின் தலைமையில் புதிரை வண்ணார் சமூகத்தின் சமூக பொருளாதார நிலையை கண்டறிவதற் காக, மாநிலம் முழுவதும் இந்த கணக்கெடுப்பு பணி  நடைபெற உள்ளது. இந்த  பணிக்காக, இப்சோஸ் (IPSOS) என்ற பிரபல  ஆராய்ச்சி நிறுவனத்தை தமிழக அரசின் ஆதிதிரா விடர் நலத்துறை இயக்கு நரகம் நியமித்துள்ளது. இந்நிறுவனம், துறை  அதிகாரிகள், புதிரை வண்ணார் நலவாரிய உறுப்பினர்கள், உள்ளூர் சமூகத்தினர் மற்றும் அரசு  பிரதிநிதிகளுடன் ஆலோ சணை நடத்தி கணக் கெடுப்பை மேற்கொள்ள உள்ளது என கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார்.

தஞ்சை அருங்காட்சியகத்தில்  இன்று சிறப்பு மருத்துவ முகாம்  ஆட்சியர் தகவல்

தஞ்சாவூர், மார்ச் 13-  தஞ்சாவூர் அருங்காட்சியக வளாகத்தில் செய்தி மக்கள்  தொடர்புத் துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்படக் கண்காட்சி கடந்த மார்ச் 9 அன்று தொடங்கப்பட்டு மார்ச் 15 வரை நடைபெறுகிறது. தமிழக அரசின் அனைத்து துறைகளின் சாதனைகள், திட்டங்கள் குறித்த நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், இக்கண்காட்சியில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப் பட்டுள்ளன. இக்கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள்  மாணவ, மாணவியர்கள் நாள்தோறும் பார்வையிட்டு வரு கின்றனர்.  இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பொதுமக்கள், குழந்தைகள், செய்தியாளர்களுக்காக சிறப்பு மருத்துவ முகாம் அருங்காட்சியக தரைத்தளத்தில் மார்ச் 14 (வியா ழன்) அன்று காலை 10 முதல் மாலை 4 மணி வரை நடை பெற உள்ளது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையினர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்த மருத்துவ முகாமில் பொதுமக்கள், குழந்தைகள், பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

பட்டுக்கோட்டை அருகே உழவர் வயல் தின விழா

தஞ்சாவூர், மார்ச் 13-  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை  உதவி இயக்குநர் (பொ) இ.அப்சரா வெளியிட்டுள்ள செய்திக்  குறிப்பில், பட்டுக்கோட்டை வட்டாரம், ஏனாதி கிராமத்தில் வேளாண்மைத் துறை சார்பாக, அட்மா திட்டத்தின்கீழ் உழவர் வயல் தின விழா நடத்தப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் சுதாகர் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை வேளாண் ஆராய்ச்சி  நிலைய உதவி பேராசிரியர் ஆனந்த், “கோடை காலத்தில்  சாகுபடி செய்யப்படும் பயிர்கள், அவற்றின் ரகங்கள் மற்றும் சாகுபடி தொழில்நுட்பங்கள், விதை நேர்த்தியின் முக்கி யத்துவம், மண் மாதிரி சேகரிப்பு முறை பற்றியும்” விவசா யிகளுக்கு எடுத்துரைத்தார்.  இயற்கை விவசாயி கமலக்கண்ணன், அங்கக விவசாயம்,  அங்கக இடுபொருட்களான பஞ்சகவ்யம், மீன் அமிலம், அக்னி அஸ்திரம் தயாரிப்பு முறை பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.     வேளாண்மை அலுவலர் சன்மதி வரவேற்றார். இந்த  ஆர்.வி.எஸ் வேளாண் கல்லூரி மாணவர்கள், விவசாயி களுடன் கலந்துரையாடினர். அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ் நன்றி கூறினார் என தெரி விக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்புகளை அகற்றிய பிறகு  பொது ஏலம் நடத்த கோரிக்கை

மயிலாடுதுறை, மார்ச் 13 - மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகேயுள்ள காழியப்பநல்லூர் ஊராட்சி  துடரிப்பேட்டை கிராமத்தில் ஆக்கிரமிப்பு களை அகற்றிய பிறகே பொது ஏலத்தை நடத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். காழியப்பநல்லூர் ஊராட்சி, துடரிப் பேட்டை நரிகரான் தோப்பில் ஊராட்சிக்கு சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட புளிய மரங்கள் இருக்கின்றன. இதில் உள்ள புளியம் பழங்களை ஏலம் விடவுள்ளதாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் புதனன்று காலை ஊராட்சித் தலைவர் மற்றும் ஊராட்சி  செயலர் உள்ளிட்ட நிர்வாகத்தினர் அப்பகு திக்கு வந்தனர்.  இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள்,  ஊராட்சிக்கு சொந்தமான இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். ஆக்கி ரமிப்பு பகுதிகளிலும் புளியமரங்கள் உள்ளனர்.  கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஊராட்சி  நிர்வாகத்திடம் ஆக்கிரமிப்பு பற்றி மனுக்கள் வாயிலாகவும், நேரிலும் முறையிட்டோம். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. உட னடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதன் பிறகே மரங்களை பொது ஏலம் விட வேண்டு மென முறையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஊராட்சி மன்றத் தலைவர் பொதுமக்க ளிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆக்கிர மிப்பை அகற்றுவதாக உறுதியளித்த பின்,  போராட்டத்தை கைவிட்டனர். பொதுமக்க ளின் போராட்டத்தையடுத்து பொது ஏலம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

நாளை தனியார் துறை  வேலைவாய்ப்பு முகாம் 

தஞ்சாவூர், மார்ச் 13-  தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக, வேலை தேடும்  இளைஞர்களுக்காக மாதந்தோறும் மூன்றாவது  வெள்ளிக்கிழமையில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு  முகாம் அலுவலக வளாகத்திலேயே காலை 10 மணி  அளவில் நடத்தப்பட்டு வருகிறது.  இதன்படி மார்ச் 15 (வெள்ளிக்கிழமை) காலை  10 மணியளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்  நடத்தப்பட உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில்,  தஞ்சாவூரில் உள்ள முன்னணி தனியார்துறை நிறுவனங்கள்  கலந்து கொண்டு நூற்றுக்கும் அதிகமான காலிப்  பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய  உள்ளனர்.  இம்முகாமானது, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த  வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு  செய்யப்பட்டுஉள்ளது. முகாமில் 8 ஆம் வகுப்பு முதல்  12 ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ,  பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம். வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை  இம்முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு செய்து  கொள்ளலாம். முகாமில், தங்களின் சுய விவர அறிக்கை, கல்விச்சான்று கள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்க ளின் நகல்களுடன் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை  பெறலாம். மேலும், விவரங்களுக்கு 04362-237037 என்ற  தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என   தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித் துள்ளார்.

துள்ளார். பைக் மீது லாரி மோதி விபத்து: லிப்ட் கேட்டு வந்த முதியவர் பலி

அரியலூர், மார்ச் 13 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே யுள்ள அருள்மொழி காலனி தெருவைச் சேர்ந்தவர்  சிவக்கொழுந்து (59). கூலி தொழிலாளியான இவர், புதுப் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சிநாதன் (30)  என்பவரின் மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு, பின்னால்  அமர்ந்து சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.  அப்போது காரைக்குறிச்சிக்கும் அருள்மொழிக்கும் இடையில் உள்ள சாலையில் மோட்டார் சைக்கிள் சென்று  கொண்டிருந்த போது, எதிரில் மணல் ஏற்றி வந்த  டிப்பர் லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் கொளஞ்சி நாதன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதி யது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயமடைந்த னர். இதில் முதியவர் சிவக்கொழுந்து சம்பவ இடத்தி லேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.  சம்பவம் அறிந்து வந்த தா.பழூர் போலீசார், சிவக்கொ ழுந்துவின் உடலை மீட்டு ஜெயங்கொண்டம்  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த கொளஞ்சிநாதன் ஜெயங்கொண்டம்  அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இ-சேவை மையங்களில் எல்.எல்.ஆர் திருச்சி ஆட்சியர் தகவல்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 13- தற்போது எல்.எல்.ஆர் (வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம்) பெற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளையும், இடைத்தரகர்களையும் பொதுமக்கள் அணுக வேண்டிய  நிலை உள்ளது. இதில் தேவையற்ற செலவு பொதுமக்க ளுக்கு ஏற்படுகிறது. மேலும் இந்த முறையில்  வெளிப்படைத் தன்மையும் இல்லாமல் உள்ளது.  இந்த சேவைகளைப் பெறுவதற்கு பொதுமக்கள் அருகில் உள்ள நகரங்களுக்கு வரவேண்டிய சூழல்  உள்ளது. இதனைத் தவிர்ப்பதற்காகவும், இதுகுறித்து  எந்தவித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில்  இதை மேம்படுத்துவதற்கும், நடைமுறையில் உள்ள  சிக்கல்களைக் களைவதற்கும், பொதுமக்கள் வசிக்கும்  இடங்களுக்கு அருகிலேயே இந்த சேவையை கொண்டு சேர்ப்பதற்கும், தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதனடிப்படையில், மாநிலம் முழுவதும் உள்ள  55,000-க்கும் அதிகமான இ-சேவை மையங்கள் மூலம்  எல்.எல்.ஆர் (வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர்  உரிமம்) பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த முறை  மார்ச் 13 அன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக்  கொண்டு தங்களுக்கு அருகிலுள்ள இ-சேவை  மையங்கள் மூலமாக இனி எல்.எல்.ஆர் (வாகனங்கள்  ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம்) பெற விண்ணப் பிக்கலாம். இந்த சேவையைப் பெறுவதற்கு பொதுமக்கள் கூடுதலாக இ-சேவை மையத்திற்கான சேவைக் கட்டண மாக ரூ.60 செலுத்த வேண்டும். ஒப்புதல் அளிக்கப்பட்ட எல்.எல்.ஆர்-ஐ வழக்கம் போல விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  தொடர்ந்து மோட்டார் வாகனத் துறை மூலம் பொது மக்கள் பெறக்கூடிய இதர சேவைகளையும், இ-சேவை  மையங்கள் மூலமாக விண்ணப்பிப்பதற்கு நட வடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

போக்சோ வழக்கில்  தண்டனை பெற்றவர் மரணம்  போலீசார் விசாரணை

மதுரை, மார்ச் 13-  மதுரையில் போக்சோ வழக்கில் தண்டனை பெற்று  சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறைவாசி அரசு மருத்து வமனையில் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசா ரணை மேற்கொண்டனர். விருதுநகர் பாத்திமா நகர், கிருஷ்ணாமாச்சாரியார் சாலையைச் சேர்ந்தவர் ஜேசுராஜ் (20). இவர், கடந்த  2021 ஆம் ஆண்டில் போக்சோ வழக்கில் கைது செய்யப்  பட்டார். திருவில்லிபுத்தூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத் தால் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்று மதுரை  மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.  இந்நிலையில் சிறையில் ஜேசுராஜூக்கு திங்களன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சிறை  மருத்துவமனையில் முதலுதவிக்கு பின்னர் அங்கிருந்து  மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.  அங்கு தீவிரச்சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜேசுராஜ் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.  இச்சம்பவம் தொடர்பாக சிறை அலுவலர் பிரகாஷ்  அளித்தப் புகாரின்பேரில் அரசு மருத்துவமனை  காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.

குற்றவாளிகளை 10 நாட்களுக்குள்  பிடித்த போலீசாருக்கு பாராட்டு 

தஞ்சாவூர், மார்ச் 13-  நகை மற்றும் பணத்தை திருடிய 2 பேரை, 10 நாட்களுக் குள் விரைவாக செயல்பட்டு கைது செய்த காவல்துறை யினரை தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பாராட்டினார். தஞ்சாவூர் அருகே சுந்தரம் நகரைச் சேர்ந்த சந்திரசேகர்  என்பவர் கடந்த மார்ச் 5 அன்று தனது வீட்டில் நகை மற்றும்  பணம் திருடு போனது தொடர்பாக தமிழ்ப் பல்கலைக்கழக காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.  இந்நிலையில், வல்லம் காவல்துறை துணை கண்கா ணிப்பாளர் நித்யா மேற்பார்வையில் வல்லம் உட்கோட்ட தனிப்படை உதவி ஆய்வாளர் விஜய் தலைமையிலான, காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். இதில், சந்திரசேகர் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடி யவர்கள் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் பகுதி யைச் சேர்ந்த கருப்பசாமி (எ) பாஸ்கர் மற்றும் மதுரை  மாவட்டம் சம்மட்டிபுரம் காளவாசல் பகுதியைச் சேர்ந்த  கார்த்தி (எ) கார்த்திகேயன் என்பது தெரிய வந்தது. இதை யடுத்து தனிப்படையினர் பாஸ்கர் மற்றும் கார்த்திகேயனை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 25 பவுன் தங்க நகை மற்றும் 352 கிராம் வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.  இந்த வழக்கில் 10 நாட்களுக்குள் சிறப்பாக விசாரணை  நடத்தி, குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை மேற் கொண்ட காவல்துறையினரை மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பாராட்டினார்.