கரூர், அக்.25 - கரூரில் நிர்மல் பள்ளி நிதியாக ரூ.50 ஆயிரம் வழங்கிய குணசேகரனை சிஐடியு மாநிலக் குழு பாராட்டியது. புகளூர் காகித ஆலையில் பணியாற்றும் குணசேகரன், தனது பணி நேரம் நீங்கலாக சொந்த விவசாயமும் செய்து வருகிறார். தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நிர்மல் பள்ளிக்கு நிதி வழங்கி வருகிறார். கரூர் மாவட்டத்தில் வெள்ளியன்று, 3 ஆவது ஆண்டாக ரூ.3 லட்சம் நிர்மல் பள்ளி நிதி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அ.சவுந்தரராசனிடம், ரூ.50 ஆயி ரத்தை நிர்மல் பள்ளி நிதியாக குணசேகரன் வழங்கினார். சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தர ராசன், சிஐடியு மாநிலக் குழு சார்பாக குணசே கரனுக்கு சால்வை அணிவித்து நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.