districts

img

பாக்சிங் போட்டியில் தங்கம் வென்ற கான்ஸ்டபிளுக்கு பாராட்டு

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் தேசிய அளவிலான பாக்ஸிங் போட்டி நடந்தது. இதில் அனைத்து மாநில போலீசார், ராணுவத்தினர், எல்லை பாதுகாப்பு படையினர் பங்கேற்றனர். இதில் தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை காவல் நிலைய கான்ஸ்டபிள் ஹரிகிருஷ்ணன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். தங்கப்பதக்கம் வென்ற ஹரி கிருஷ்ணனை அம்மாப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் இளவரசு, உதவி ஆய்வாளர்கள் செல்வராணி, சித்ரா உட்பட சக போலீசார் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினர்.