districts

img

கருத்தரங்கம்

கும்பகோணம், மார்ச் 3- குடந்தை அரசு கலைக் கல்லுாரி - இந்திய பண்பாடு மற்றும் சுற்றுலாவியல் துறையும், கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கமும் இணைந்து ‘‘சோழர்கள் ஒரு மீள் புரிதல்’’ எனும் தலைப்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் கும்பகோணம் அரசினர் கலை கல்லூரியில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் நா.தனராஜன் தலைமை வகித்தார். துறைத்தலைவர் சீ.தங்கராசு வரவேற்றார். கும்பகோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன், கும்பகோணம் ஆ.கோபிநாத்தின் வரலாற்று ஆய்வு நூலான ‘‘வரலாறு கூறும் திருநல்ல கூரூர்’’ (கூகூர் அருள்மிகு ஸ்ரீ ஆம்பிரவனேஸ்வரர் திருக்கோவில் வரலாறு) என்ற புத்தகத்தை வெளியிட்டார்.