கும்பகோணம், ஆக.26- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளி, நெகிழி மாசில்லா தமிழ்நாடு பிட் இந்தியா இணைந்து கார்த்தி வித்யாலயா பள்ளியில் கிருஷ்ணா ஜெயந்தி விழாவை நடத்தின. பள்ளி மாணவ-மாணவிகள் கிருஷ்ணர் மற்றும் ராதே போன்று வேடம் அணிந்து, கிருஷ்ணரின் பிறப்பை நாடகம் மூலம் நடித்துக் காட்டினர். ஏராளமான கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தன. நிகழ்ச்சி யில் அனைத்து மாணவ-மாணவியர்களுக் கும் பள்ளி தலைவர் எஸ்.ஏ.கார்த்திகேயன் சிறப்பு பரிசுகளை வழங்கினார். பள்ளி தாளா ளர் பூர்ணிமா கார்த்திகேயன் மாணவர்களை வாழ்த்தினார். பள்ளி முதல்வர் டி.அம்பி காபதி வரவேற்றார்.