குழித்துறை, ஏப்.28 - குமரி மாவட்டத்தில் பிர சித்தி பெற்ற கூட்டாலுமூடு பத்ரேஷ்வரி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் ஆயிரக் கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். கூட்டாலுமூடு பத்ரேஷ்வரி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 28 (ஞாயிறன்று) அதி காலை 5 மணிக்கு கொடி யேற்றத்துடன் துவங்கியது. திருக்கொடியை கோவில் தந்திரி சங்கரன் நம்பூதிரி ஏற்றி வைத்து, விழாவை துவக்கி வைத்தார். பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முதல் நாளில் ஆயிரக்கணக்கான பக்தர் கள் கோவிலில் குவிந்து அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபட்டனர். விழாவின் பத்தாம் நாள் திருவிழாவில் ஐந்து யானைகளுடன் அம்மன் பவனி நடைபெறும்.