கரூர்,பிப்.1- கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட மஞ்சமேடு மணி நகரில் 5 மற்றும் 6 ஆவது வார்டில் செல்லும் பாதையில் உள்ள ஆக்கிர மிப்புகள் கடந்த ஆண்டு குளித்தலை கோட்டாட்சியர் முன்னிலையில் அகற் றப்பட்டு மீண்டும் புதிய சாலை அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பாதையில் கிருஷ்ணராயபுரம் பேரூ ராட்சி நிர்வாகம் இதுவரை சாலை அமைத்து கொடுக்காமல் அலட்சியமாக செயல்பட்டு வருவதை கண்டித்தும், பொதுமக்களின் நலன் கருதி உடனடி யாக தார்ச்சாலை அமைத்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மணி நகர் கிளையின் சார்பில் பொதுமக்கள் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி அலுவ லகத்தில் கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் உடனடியாக ஒரு வார காலத் திற்குள் சாலை அமைப்பதாக வருவாய் கோட்டாட்சியர் உறுதியளித்தார். ஆனால் கிருஷ்ணராயபுரம் பேரூ ராட்சியில் கடந்த 2 மாதங்களாக நடை பெற்ற கூட்டத்தில் இதுவரை மணி நக ருக்கு சாலை அமைப்பது குறித்து எந்த விதமான தீர்மானம் நிறைவேற்ற வில்லை. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மா.ஜோதிபாசு தலைமையில் குளித்த லை வருவாய் கோட்டாட்சியரை நேரில் சந்தித்து தார்சாலையை உடனடியா க அமைத்து கொடுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பேசினர். இதைக்கேட்ட கோட்டாட்சியர் பிப்ரவரி 02 ஆம் தேதி நேரில் அப்பகுதியில் களஆய்வு மேற்கொண்டு தார்ச்சாலை அமைத்து தருவதாக உறுதியளித்தார். இதில் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் ஜி.தர்மலிங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் கே.சுப்பிரமணியன், கிளைச் செயலாளர் கே.பாலசுப்பிரமணியன் மற்றும் மணி நகர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.