districts

கோடியக்கரை: ரோந்து பணியில் ஹோவர் கிராப்ட்

வேதாரண்யம், மார்ச் 27 - கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட், மண்டபம் முகாமிலிருந்து கோடியக்கரை புதிய கலங்கரை விளக்கம் அருகே கடற்கரையில் முகாமிட்டுள்ளனர். இது குறித்து ஹோவர்கிராப்ட் அதிகாரிகளிடம் கேட்டபோது, வழக்கமான ரோந்து பணிக்காக  வந்திருப்பதாகவும், கோடியக்கரையில் முகா மிட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். தினந்தோ றும் காலை, மாலை வேளைகளில் ரோந்து  பணியில் ஈடுபடும். இலங்கையில் பொருளா தார நெருக்கடி ஏற்பட்டிருக்கும் இவ்வேளை யில், இலங்கை அகதிகள் தமிழகத்திற்கு வரு வது தொடங்கியிருக்கிறது. இரு தினங்களுக்கு  முன் தனுஷ்கோடிக்கு வந்த இலங்கை அகதி கள், ஹோவர்கிராப்ட் மூலம் மீட்கப்பட்டு, மண்டபம் முகாமிற்கு அழைத்து வரப்பட்டனர்.