வேதாரண்யம், செப்.16- மூன்று மாதமாக கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் வராததை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதா ரண்யம் தாலுகா கத்தரிப்புலம் ஊராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடந்த போராட்டத்திற்கு கட்சியின் முன்னாள் கிளைச் செயலாளர் ராஜேந்திர பூபதி தலைமை வகித்தார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் கோவை சுப்பிரமணி யன் போராட்டத்தை துவக்கி வைத்தார். ஒன்றியச் செயலாளர் வெற்றியழகன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கத்தரிப்புலம் ஊராட்சியில் மூன்று மாதமாக கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் வரவில்லை. 9வது வார்டில் ஆதி திராவிடர் நல மக்களுக்கு மயானச் சாலை அமைக்க வேண்டும். பழுத டைந்த சாலைகளை செப்பனிட வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. தகவலறிந்து வந்த வேதாரண்யம் தாசில்தார் ஜெயசீலன், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜு, கரியாபட்டினம் காவல் ஆய்வாளர் ஜெயேந்திர சரஸ்வதி, ஊராட்சி மன்ற தலைவர் வீரமணி, ஊராட்சி செயலா ளர் வீரபாண்டியன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், விரைவில் அடிப்படை தேவைகள் நிறைவேற்றித் தரப்படும் என உறுதியளித்ததின் பேரில் போராட் டம் கைவிடப்பட்டது.