districts

img

தேசிய அளவிலான தடகளப் போட்டிக்கு கரூர் வீரர் தேர்வு

கரூர், செப்.27 - 38 ஆவது மாநில இளையோருக் கான தடகளப் போட்டிகளை கடந்த செப்.19 முதல் 22 வரை  தமிழ்நாடு தடகள சங்கமும், ஈரோடு மாவட்ட தடகள சங்கமும் இணைந்து நடத்தின.  இப்போட்டியில் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 3500-க்கும் மேற்பட்ட தடகள வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் கரூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் 80 விளையாட்டு வீரர்கள்  கலந்து கொண்டனர். அதில் பி. விக்னேஷ் 20 வயதுக்கு உட்பட்ட பிரி வில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்ட போட்டியில் 12 வருட சாதனையை முறியடித்து, 52.20 வினாடிகள் கடந்து தங்க பதக்கம் வென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, இவர் 25.10.24 முதல் 29.10.24 வரை ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்கு தமிழகம் சார்பில் கலந்து கொள்ள உள்ளார்.  20 வயதுக்குட்பட்ட பிரிவில்  400  மீட்டர் தொடர் ஓட்டத்தில் கரூர் மாவட்ட  அணி வெண்கலப் பதக்கம் வென்றுள் ளது. அதில் தீபக் கிஷோர், தருண்ராஜ்,  விக்னேஷ் மற்றும் அரவிந்த் ஆகியோர்  விளையாடினர்.   தமிழ்நாடு தடகள சங்க செயலாள ரும் தேசிய தடகள சம்மேளனத்தின் இணை செயலாளருமாகிய சி.லதா, வெற்றி பெற்ற வீரர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.