கரூர்,நவ.3- கரூர் பரணி கல்விக் குழுமத்தில் 2 நாட்கள் அறிவியல் திருவிழா நடைபெற்றது. பரணி வித்யாலயா (சிபிஎஸ்இ) பள்ளியின் குழந்தை கள் அறிவியல் திருவிழாவை கரூர் மாநகராட்சி ஆணை யாளர் கே.சரவணக்குமார் தொடங்கி வைத்தார். பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் குழந்தைகள் அறிவியல் திருவிழாவை கரூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் பி.சரவணன் தொடங்கி வைத்தார். அறிவியல் திருவிழாவில் வேளாண்மை, வாழ்விட வகைகள், கண்டுபிடிப்புகள், தொழிற்சாலைகள் வளர்ச்சி, மனித உடற்கூறியல் ஆய்வு உள்ளிட்ட 963 அறிவியல் படைப்புகள் மற்றும் ஆய்வுகள் 2993 இளம் அறிவியல் விஞ்ஞானிகளால் காட்சிப்படுத்தப்பட்டன. பரணி குழந்தை விஞ்ஞானிகளின் அறிவியல் திறமையை பார்வையாளர்கள் வெகுவாக பாராட்டினர். இவ்விழாவிற்கு பரணி கல்விக் குழுமத் தாளாளர் எஸ்.மோகனரங்கன் தலைமை வகித்தார். செயலர் பத்மாவதி மோகனரங்கன், அறங்காவலர் எம்.சுபாஷினி முன்னிலை வகித்தனர். இதற்கான ஏற்பாடுகளை பரணி கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர் சி.ராமசுப்ரமணியன் தலைமையில் பரணி வித்யாலயா முதல்வர் எஸ்.சுதாதேவி, பரணி பார்க் முதல்வர் கே.சேகர், எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரி முதல்வர் பி.சாந்தி, துணை முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். 2000 ஆண்டு பழமையான தமிழியில் பெயர் எழுதும் அரங்கு, ஜப்பான் பண்பாட்டு அரங்கம், மாணவர் ஓவியம் மற்றும் கலைப்பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.