கரூர், ஜூலை 13 - மின் வாரியத்தில் 65,000 காலிப் பணி யிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கரூர் மின் ஊழியர் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) கரூர் மாவட்ட 12 ஆவது மாநாடு தோழர் எஸ்.பஞ்ச ரத்னம் நினைவரங்கத்தில் (ஹோட்டல் சிவ்முருகாவில்) நடைபெற்றது. மாநாட்டிற்கு கிளைத் தலைவர் வி.சுப்பிரமணியன் தலைமை வகித் தார். சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவா னந்தம் மாநாட்டை துவக்கி வைத்து பேசி னார். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவர் ஸ்ரீதேவி மாநாட்டை நிறைவு செய்து பேசி னார். மாவட்டச் செயலாளர் கே.தனபால் வேலையறிக்கையை முன் வைத்து பேசினார். மாவட்ட பொருளாளர் செல்வம் வரவு - செலவு அறிக்கையை முன்வைத்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.முரு கேசன், மாவட்ட துணைத் தலைவர் எம்.சுப்பிரமணியன், முன்னாள் செயலாளர் குமரேசன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். மாவட்டத்தின் புதிய செயலாளராக நெடுமாறன், தலைவராக சுப்பிரமணியன், பொருளாளராக ஈஸ்வரன் மற்றும் துணைத் தலைவர்களாக தனபால், கோபாலகிருஷ்ணன், கென்னடி, செல்ல முத்து, நாகராஜன், செல்வராஜ், துரை, தேக்கமலை, பழனிச்சாமி, விஜயகுமார் மற்றும் துணைச் செயலாளர்களாக ரதி, மேகநாதன், தமிழ்செல்வன், தண்டபாணி, சந்திரன், கண்ணதாசன், செல்வம், சோம சுந்தரம், ஜான் போஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் சிஐடியு இதழ் 30 ஆண்டு சந்தா மற்றும் சிஐடியு மாவட்டக் குழு நிதி யாக ரூ.5000 வழங்கப்பட்டது. மின் வாரியத்தில் காலியாக உள்ள 65,000 பணியிடங்களை நிரப்பிட வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஒப்பந்த தொழி லாளர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும். கரூர் மின் வட்டத்தில் நமது சங்க அலுவலக கட்டிடம் ஒதுக்கிட வேண்டும். கேங்மேன் பணியாளர் களுக்கு சொந்த மாவட்டத்திற்கு ஊர் மாற்றம் செய்ய உத்தரவு வழங்க வேண்டும். கரூர் துணை மின் நிலையங்கள் மூன்று பணிக்கும் இரண்டு பணியாளர்களை பணி நியமனம் செய்ய வேண்டும். 8 மணி நேரம் வேலை நேரத்தை அமல்படுத்த வேண்டும். கரூர் அனைத்து பிரிவு அலுவ லகங்களிலும் ஆண், பெண் இருபால ருக்கும் தனித்தனியே கழிவறை மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகளை அமைத்திட வேண்டும். கரூர் மின் வட்டத் தில் ஊர் மாற்றம் செய்த விண்ணப்பங்க ளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவில் கட்டுமான பிரிவில் ஆக்க முகவர் இரண்டாம் நிலை இருப்ப வர்களுக்கு, ஆக்க முகவர் முதல் நிலை பணி ஆணை வழங்கிட வேண்டும். மின் நுகர்வோருக்கு அளிக்கும் நூறு யூனிட் மின்சாரத்தை தொடர்ந்து வழங்கிட வேண்டும். கரூர் மின்வட்டத்தில் கணக்கீட்டு பிரிவு ஊழியர்களுக்கு தேவையான கணினி மற்றும் அனைத்து உபகரணங்களும் வழங்க வேண்டும். கணக்கீட்டாளர்களுக்கு அளவீடு செய்திட செல்போன், டேட்டா சிம் கார்டு களை வாரியமே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.