கரூர், ஆக.4 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு சார்பில் வயநாட்டிற்கு நிவாரண நிதியாக ரூ.35 ஆயிரம் வழங்கப் பட்டது. ஒன்றிய பாஜக அரசு சர்வாதிகாரத்தன மாக நடைமுறைப் படுத்தியுள்ள மூன்று குற்ற வியல் சட்டங்கள் மற்றும் நீட் தேர்வு எதிர்ப்பு கருத்தரங்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு சார்பில் நடை பெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் மா. ஜோதிபாசு தலைமை வகித்தார். கல்வியா ளர் கஜேந்திரபாபு ஒன்றிய அரசின் 3 குற்ற வியல் சட்டத்தின் கொடூரத் தன்மைகள் மற்றும் நீட் தேர்வில் இந்த ஆண்டு நடை பெற்ற முறைகேடுகள், அதன் விளைவாக மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பேசினார். கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சுப்பிரமணியன் வரவேற் றார். மாவட்டக் குழு உறுப்பினர் ஐ.ஜான் பாட்சா நன்றி கூறினார். மாவட்ட செயற்குழு, மாவட்ட, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கேரளா மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு கட்சியின் கரூர் மாவட்டக்குழு சார்பில் முதல் தவணையாக ரூ.35 ஆயிரம் நிவா ரண நிதி வழங்கப்பட்டது.