மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட முதுபெரும் தோழர் ஜி.ரத்தினவேலுவின் பேரனும், தீக்கதிர் மதுரை பதிப்பில் பணியாற்றிய சிவசுப்பிரமணியம் - வடிவுக்கரசி தம்பதியரின் மகன் மருத்துவர் அமுதன் - மருத்துவர் மதுமிதா ஆகியோரின் திருமண வரவேற்பு விழா திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு ஸ்பேஸ் திருமண மஹாவில் நடைபெற்றது. திண்டுக்கல் முன்னாள் எம்எல்ஏவும், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான கே.பாலபாரதி, கரூர் மாவட்ட செயலாளர் மா.ஜோதிபாசு, சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம், நகரச் செயலாளர் எம்.தண்டபாணி, கரூர் ஒன்றியச் செயலாளர் எம்.ராஜேந்திரன், பரமத்தி ஒன்றியச் செயலர் சி.ஆர். ராஜாமுகமது, மாவட்டக் குழு, நகரக் குழு உறுப்பினர்கள், அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் இளங்கோ உள்ளிட்ட பலர் மணமக்களை வாழ்த்தினர். சென்னை அயனாவரம் நிர்மல் பள்ளிக்கு, மணமகன் குடும்பத்தினர் சார்பாக ரூ.3000 வழங்கினர்.