districts

img

ஜன.16 இல் ஜல்லிக்கட்டு போட்டி மாடுகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மது பரிசோதனை செய்யப்படும்: கரூர் ஆட்சியர் தகவல்

கரூர், ஜன.12 - கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம்  இராச்சாண்டார்திருமலையில் ஜல்லிக் கட்டு போட்டி நடைபெறும் இடத்தை  நேரில் பார்வையிட்டு, பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து  மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் சனிக் கிழமை கள ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது ஆட்சியர் தெரி விக்கையில், “பொங்கல் பண்டிகையை யொட்டி ஜல்லிக்கட்டு போட்டி ஜன.16 அன்று நடைபெற உள்ளது. அதை யொட்டி போட்டி நடைபெறும் முதல் நாளே, வரும் மாடுகளுக்கு குடிநீர் மற்றும் தீவனங்கள், மாடு பிடி வீரர் களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாடுகள் ஜல்லிக்கட்டு போட்டி யில் கலந்து கொள்ள உடற்தகுதி சான்றிதழுடன் வருவதற்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.  தோராயமாக 700 மாடுகளுக்கு அனு மதி வழங்க வாய்ப்பு உள்ளது. அதே போல் மாடுபிடி வீரர்கள் 50 நபர்கள் கொண்ட 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு 5 கலர்களில் பனியன்கள்  வழங்கப்பட உள்ளன. மேலும் மாடு களின் கொம்புகளில் உள்ள கூர்மையை  பரிசோதித்து விபத்து ஏற்படாத வண்ணம் ரப்பர் காப்புகள் கொம்பு களில் மாட்டப்பட உள்ளன. முக்கிய மாக மாடுகளும், மாடுபிடி வீரர்களும் மது போதையில் உள்ளார்களா என்று  உடனுக்குடன் சுவாச பரிசோதனை மேற்கொள்ளப்படும். ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்தில் போதிய அளவிற்கு குடிநீர், கழிவறை, மருத்துவ வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப் படும்” என்றார். ஆய்வின்போது மாவட்ட வருவாய்  அலுவலர் ம.கண்ணன், மாவட்ட ஊரக  வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீலேகாதமிழ் செல்வன், குளித்தலை சார் ஆட்சியர் தி.சுவாதிஸ்ரீ, கூடுதல்  காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்தி ரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.