கரூர், நவ.3- அண்மையில் நடைபெற்ற பல்வேறு தேசிய சிபிஎஸ்இ விளை யாட்டுப் போட்டிகளில் கரூர் பரணி வித்யாலயா மாணவர்கள் அபார சாதனை புரிந்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடை பெற்ற தேசிய ஜூடோ சாம்பி யன்ஷிப் போட்டியில் கரூர் பரணி வித்யாலயா மாணவி தனிகா 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், மாணவர் சஞ்சித் 11 வயதுக்குட்பட்டோர் பிரி வில் வெண்கலப் பதக்கமும் வென்றனர். மேலும் சென்னையில் சிபி எஸ்இ பள்ளிகளுக்கு இடையி லான தென்னிந்திய அளவிலான ஜூடோ விளையாட்டுப் போட்டி களில் கரூர் பரணி வித்யாலயா 20 தங்கப் பதக்கமும், 10 வெள்ளிப் பதக்கமும், 11 வெண்கலப் பதக்க மும் வென்று தொடர்ந்து 12 ஆவது முறையாக ஒட்டுமொத்த சாம்பி யன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் நடை பெற்ற தேசிய ஏரோபிக்ஸ் போட்டி யில், கரூர் பரணி வித்யாலயா ஏரோபிக்ஸ் அணியில் 12 வயதிற்குட் பட்டோர் பிரிவில் சபரி யஸ்வந்த், நிவிதா, ரிதன்யா, சஸ்தா, பிரீத்தா, மோஹிதா, யாழினி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை புரிந்து உள்ளனர். ஹரியானாவில் நடை பெற்ற தேசிய டென்னிஸ் போட்டி யில் 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் கரூர் பரணி வித்யாலயா மாண வர்கள் சர்வின், சஞ்சீவ் ஆகியோர், தேசிய அளவில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் குழுப் பிரிவில் பங்கேற்று, முதல் 10 இடங்களுக்குள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். மதுரையில் நடைபெற்ற சிபி எஸ்இ பள்ளிகளுக்கு இடையி லான தென்னிந்திய அளவிலான டென்னிஸ் போட்டியில் 17 வயதிற் குட்பட்டோர் பிரிவில் மாணவர்கள் சர்வின், சஞ்சீவ் ஆகியோர் குழுப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளனர். சூரத்தில் நடைபெற்ற தேசிய யோகசனா போட்டியில் 14 வயதிற் குட்பட்டோர் பிரிவில் கரூர் பரணி வித்யாலயா லுகேஸ், நிரஞ்சன், சபரிநாதன், ரித்திக், செந்தூர் பிரணவ் ஆகியோர் அடங்கிய மாணவர் அணி, தேசிய அளவில் முதல் 5 இடங்களுக்குள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் நடைபெற்ற சிபி எஸ்இ பள்ளிகளுக்கு இடையி லான தென்னிந்திய அளவிலான யோகாசன போட்டியில் பரணி வித்யாலயா அணியினர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளனர். தேசிய சிபிஎஸ்இ விளை யாட்டுப் போட்டிகளில் அபார சாதனை புரிந்த மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடை பெற்றது. இவ்விழாவிற்கு தாளா ளர் எஸ்.மோகனரங்கன் தலைமை வகித்தார். செயலர் பத்மாவதி மோகனரங்கன் மற்றும் அறங்கா வலர் சுபாஷினி அசோக்சங்கர் முன்னிலை வகித்து சாதனை மாணவர்களையும், சாதனைக்கு உறுதுணையாக இருந்த முதன்மை முதல்வர் சி.ராமசுப்பிரமணியன், முதல்வர் எஸ்.சுதாதேவி, துணை முதல்வர் ஆர.பிரியா, ஆசிரியர் களைப் பாராட்டினர்.