கரூர், ஜன.17 - தமிழ் மொழியில் தலைசிறந்த மாண வர்களை கண்டறிந்து ஊக்கப்படுத்து வதற்காக தமிழ்நாடு அரசால் 2022 ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவில் அனைத்து வகைப் பள்ளிகளிலும் 11 ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்கள் பங்குபெறும் வகையில், தமிழ்மொழி இலக்கிய திற னறிதல் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் அரசுப் பள்ளி மாண வர்கள் உட்பட அனைத்து வகை பள்ளி மாணவர்கள் பிரிவில், ஒரு ஆண்டிற்கு 750 பேருக்கு, ஒவ்வொரு மாணவருக் கும் மாதம் ரூ.1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.36 ஆயிரம் பரிசுத்தொகை தமிழக அரசால் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் இரண்டு லட்சத் திற்கும் அதிகமானோர் பங்குபெறும் மிகக் கடினமான இத்தேர்வில், கரூர் பரணி பார்க் மெட்ரிக், பரணி வித்யா லயா சி.பி.எஸ்.இ பள்ளிகளில் பயின்று 2022 இல் 46 பேர் (கட் ஆப் மதிப்பெண் 100/81), 2023 இல் 103 பேர் (கட் ஆப் 91), 2024 இல் 86 பேர் (கட் ஆப் 94) என, மூன்றாண்டுகளில் இதுவரை 235 பேர் வெற்றி பெற்றுள்ளனர். மொத்தம் 84,60,000 ரூபாய் தமிழக அரசின் பரிசுத் தொகை வென்று அன்னைத் தமி ழுக்கும், கரூர் மாவட்டத்திற்கும் அளப் பரிய பெருமை சேர்த்துள்ளனர். 235 சாதனை மாணவர்களுக்கும், அவர்களுக்கு மிகச் சிறப்பாகப் பயிற்சி அளித்து உலக அரங்கில் தமி ழுக்கும் கரூருக்கும் தொடர்ந்து பெருமை சேர்க்கும் பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர் சொ.ராமசுப்பிரமணியன் தலைமையிலான பரணி வித்யாலயா முதல்வர் சு.சுதாதேவி, பரணி பார்க் முதல்வர் க.சேகர் மற்றும் ஆசிரியப் பெருமக்களுக்கு பாராட்டு விழா பரணி பார்க் கல்வி வளாகத்தில் நடை பெற்றது. இந்தப் பாராட்டு விழாவிற்கு பரணி பார்க் கல்வி குழுமத் தாளாளர் சா. மோகனரெங்கன் தலைமை வகித்தார். செயலர் பத்மாவதி மோகனரங்கன், அறங்காவலர் சுபாஷினி அசோக்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரணி பார்க், வித்யாலயா பள்ளி களில் பயின்று தமிழ் மொழி இலக்கியத் திறனறிதல் தேர்வு 2024 ஆம் ஆண்டில், 94 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று 86 மாணவர்கள் அபார சாதனை படைத்து உள்ளனர். இதுமட்டுமின்றி, பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான நமது தமிழ்ச் சங்க இலக்கியத்தின் 36 நூல்களை யும் தமிழ் மொழியின் முதல் எழுத்து வடிவமான ‘தமிழி’ எழுத்து வடிவில், கையெழுத்து பிரதி புத்தகங்களாக பரணி கல்விக் குழும ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து தொகுத் துள்ளனர். கடந்தாண்டு அகில இந்திய 12 ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ அரசுப் பொதுத் தேர்வில் பரணி வித்யாலயா மாண வர்கள் 5 பேர், தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று தமிழகத்திற்கு தேசிய அளவில் பெருமை சேர்த்தனர்.