கரூர், பிப்.4- கரூர் பரணி பார்க் சாரணர் மாவட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா பரணி பார்க் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கரூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) செல்வமணி தலைமை வகித்தார். பரணி பார்க் கல்வி குழும தாளாளர் எஸ்.மோகனரங்கன் வரவேற்று பேசி னார். தமிழ்நாடு தனியார் பள்ளி களின் இயக்குநரும் பாரத சாரணர் சாரணியர் இயக்கத்தின் மாநில ஆணையருமான முனைவர் நாகராஜ முருகன், பரணி பார்க் சாரணர் மாவட் டத்தின் புதிய பொறுப்பாளர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து சிறப்புரையாற்றினார். கரூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மணிவண்ணன், பரணி பார்க் சாரணர் மாவட்ட துணைத் தலை வர்கள் பத்மாவதி மோகனரங்கன், சுபாஷினி அசோக்சங்கர், பரணி பார்க் சாரணர் மாவட்ட முதன்மை ஆணையர் முனைவர் சி.ராமசுப்பிர மணியன், ஆணையர்கள் எஸ்.சுதா தேவி, கே.சேகர், மாவட்ட செயலர் ஆர்.பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பரணி பார்க் சாரணர் மாவட்டத் தின் தலைவராக பள்ளி தாளாளர் எஸ்.மோகனரங்கன், மாவட்ட முதன்மை ஆணையாளராக முதன்மை முதல்வர் சி.ராமசுப்பிரமணியன் மற்றும் பல்வேறு புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.