districts

img

கரூர், திருவாரூர் மாவட்டத்தில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்

கரூர்/திருவாரூர், ஜூலை 2 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  நாளிதழான தீக்கதிர் நாளிதழ் மதுரை,  சென்னை, கோவை, திருச்சி, திரு நெல்வேலி ஆகிய 5 பதிப்புகளாக வெளி வருகிறது. தீக்கதிர் நாளிதழுக்கு ஜூலை  1 முதல் 10 ஆம் தேதி வரை சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக கட்சியின் கரூர்  மாநகரக் குழு சார்பில், கரூர் மாநக ரில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்  நடைபெறுகிறது. விடுதலை சிறுத்தை கள் கட்சியின் கரூர் மாநகர மாவட்டச் செயலாளர் இளங்கோவனிடமிருந்து ஒரு ஆண்டு சந்தாவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு பெற்றுக் கொண்டார். இதில் மாநகரச் செயலாளர் எம்.தண்டபாணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சக்திவேல், அசோக் நகர் கிளைச் செயலாளர் சதீஷ் உள்ளிட் டோர் சந்தா சேர்ப்பு இயக்கத்தில் கலந்து கொண்டனர். திருவாரூர் திருவாரூர் ஒன்றியம் புலிவலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தீக்க திர் சந்தா சேர்ப்பு இயக்கத்தில், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன் திருவாரூர் அருகே உள்ள புலி வலம் பகுதியில் மக்களை நேரில் சந்தித்து சந்தா சேகரிப்புப் பணியில் ஈடுபட்டார். திருவாரூர் ஒன்றியச் செயலாளர் என்.இடும்பையன், மாவட்ட செயற்குழு  உறுப்பினர் பி.கோமதி, ஒன்றியக் குழு  உறுப்பினர் பாலு, புலிவலம் கிளைச்  செயலாளர் உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். குடவாசல்  குடவாசல் பேரூராட்சி பகுதியில்  சிபிஎம் நகரக் குழு சார்பாக நடை பெற்ற சந்தா சேர்ப்பு இயக்கத்தில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தியிடம் குடவாசல் பேரூராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவரும், சிபிஎம் மூத்த தோழருமான டி.அய் யாறு, தீக்கதிர் ஒரு ஆண்டுக்கான சந்தா தொகையை வழங்கினார். தொடர்ந்து குடவாசல் பேரூராட்சிப்  பகுதியில் உள்ள வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்து சந்தா  சேர்ப்பு பணி நடைபெற்றது. இதில் சிபிஎம் குடவாசல் நகரக் குழு செயலா ளர் டி.ஜி.சேகர், மாவட்டக் குழு உறுப்பி னர் எப்.கெரக்கோரியா, விவசாயிகள் சங்கத்தின் நகரச் செயலாளர் டி.ஏ.சர வணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.

;