கும்பகோணம், ஆக.25-
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை மற்றும் கார்த்தி வித்யாலயா கல்விக் குழுமம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கார்த்தி வித்யாலயா பள்ளி தாளாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். கும்பகோணம் வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தாமரை, அரசு போக்கு வரத்து கழக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சியா ளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் பள்ளி மாணவ, மாணவி களிடம் சாலை விதிமுறைகள் குறித்து பேசினார். இந்நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். பள்ளி முதல்வர் அம்பிகாபதி நன்றி கூறினார்.