districts

img

கராத்தே பிரதர்ஸ் அறக்கட்டளை விளையாட்டு போட்டிகள்

அறந்தாங்கி, ஆக.24 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி  கராத்தே பிரதர்ஸ் சமூக நல அறக்கட்ட ளையின்  வெள்ளி விழாவையொட்டி, அறந் தாங்கி மாதிரி மேல்நிலைப் பள்ளியில் விளை யாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு கராத்தே பிரதர்ஸ் சமூக அறக்கட்டளைத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலாளர் ராஜா, பொருளாளர் விஸ்வமூர்த்தி, இணைச் செய லாளர் கார்த்திகேயன், துணைச் செயலாளர்  காசிநாதன், செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். முன்னதாக, காரைக்குடி சாலையில் உள்ள சோதனைச்சாவடி அருகே ஒலிம்பிக்  தீப ஓட்டத்தை, அறந்தாங்கி காவல் துணைக்  கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார். பெரியகடை வீதி, கட்டுமாவடி முக்கம் வழி யாக வந்த ஒலிம்பிக் தீப ஓட்டம் அரசு மாதிரி  மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதா னத்தை வந்தடைந்தது. அங்கு தமிழன் அசோசியேஷன் நிறுவ னர் டான் சத்தியமூர்த்தி ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்து,  போட்டிகளைத் தொடங்கி வைத்தார். செயற்குழு உறுப்பினர் மனோகர்  ஒலிம்பிக் உறுதிமொழியை வாசித்தார். 38 பிரிவுகளில், 27 பள்ளிகளைச் சேர்ந்த 630  மாணவ-மாணவியர் போட்டிகளில் பங்கேற்ற னர்.  அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவ லர் ஜெயந்தி, சிறப்பு விருந்தினராக வந்து,  அமைப்பின் கொடியை ஏற்றினார். தொ டர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,  மாணவியருக்கு பரிசுகளையும் சான்றிதழ் களையும் வழங்கி சிறப்புரையாற்றினார். போட்டிகளில் அதிக வெற்றி புள்ளி களைக் குவித்த வகையில், ஆடவருக்கான கேபி 25 ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் கோப்பையையும், ரூ.2025 ரொக்கப் பரிசை யும் அறந்தாங்கி குரும்பக்காடு லாரல் மேல்நிலைப் பள்ளி மாணவர்களும், மகளி ருக்கான கோப்பை மற்றும் ரொக்கப் பரிசை  அரசர்குளம் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி மாணவியரும்  தட்டிச் சென்றனர். முன்னதாக செயற்குழு உறுப்பினர் சங்கீத்குமார் வரவேற்றார். மக்கள் தொடர்பு  அலுவலர் பழனித்துரை நன்றி கூறினார்.