அறந்தாங்கி, நவ.18- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கராத்தே பிரதர்ஸ் சமூக அறக்கட்டளையின் நிறுவனர் வழக்கறிஞர் எம்.ஜி. சரவணன் நினைவு நாளை முன்னிட்டு, அறந்தாங்கி புதிய நமது இல்லத்தில் 120 க்கும் மேற்பட்ட முதியோர்க ளுக்கு மதிய உணவு, அசைவ உணவாக வழங்கபட்டது. மேலும், முதியோர்கள் அனைவருக்கும் பிஸ்கட் பாக்கெட்டுகளும் வழங்கப்பட்டன. அறக்கட்டளையின் பொருளாளர் சு.விஸ்வமூர்த்தி தலைமையில் துணைச் செயலாளர் சி.காசிநாதன், செயற்குழு உறுப்பினர் டி.செந்தில் குமார் பல்லவராயர், ஒருங்கிணைப்பாளர் எம்.ஜி.சேகர், முதி யோர்களுக்கு உணவு வழங்கி தொடங்கி வைத்தனர். அறக்கட்டளை செயற்குழு உறுப்பினர்கள் எம்.ஜி. வினோத்குமார், கே.பரக்கத்துல்லா, கே.ஆர். ராஷேஸ், எம்.ஜி.ஆர் ஹர்ஷா, அஜீம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். புதிய நமது இல்லம் தலைமைச்செயலகர் சந்திரசேகரன் உணவு வழங்கிய சமூக அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு நன்றி கூறினார்.