சீர்காழி, அக்.8 - மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதா னத்திலிருந்து கடவாசல் செல்லும் நெடுஞ்சாலையில் கண்ணுக்கினியார் கிராமத் தில் சுமார் 40 ஆண்டுகள் பழ மையான ரேசன் கடை கட்டி டம் உள்ளது. இந்த கட்டிடத்தின் சுவர் களில் விரிசல் விழுந்து, கட்டி டத்தின் உள் பகுதி மேற்கூரை யில் உள்ள சிமெண்ட் காரை கள் முழுவதும் பெயர்ந்து விழுந்து கம்பிகள் தெரிந்த வண்ணம் உள்ளது. இந்த கட்டிடம் மிகவும் சிதிலம டைந்து, எந்நேரமும் இடிந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இந்த கட்டிடம் பேருந்து நிலையம் அருகேயும், ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிக்கு அருகிலும், மக்கள் பேருந்துக்காக காத்திருக்கக் கூடிய பேருந்து நிறுத்தத்திற்கு அரு கிலும் அமைந்துள்ளது. பேருந்துக்காக வரும் பயணி கள் இந்த கட்டிடத்தில் காத்திருந்து, பேருந்து வரும் போது ஏறுகின்றனர். பள்ளி மாணவர்கள் மற்றும் பயணி கள் இந்த கட்டிடப் பகுதி யில் காத்திருக்கும் போது, திடீரென இக்கட்டிடம் இடிந்து விழுந்தால் உயி ருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இந்த கட்டிடத்தின் உறுதித் தன்மை அற்ற நிலையை கருத்தில் கொண்டு, இங்கு இயங்கி வந்த ரேசன் கடை மாற்றப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக தனியாருக்கு சொந்தமான வாடகை கடை யில் இயங்கி வருகிறது. எனவே காலம் தாழ்த்தாமல் இந்த கட்டிடத்தை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.