தூத்துக்குடி, ஆக. 4- தூத்துக்குடி மாநகராட்சி தருவைக்குளம் உரக்கிடங்கில், தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் இந்திய சுற்றுச்சூழல் அறக் கட்டளை சார்பில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் அடையாள மாக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கரு ணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச் சர் பி.கீதா ஜீவன் முன்னிலை யில் ஞாயிற்றுக்கிழமை மரக் கன்று நட்டு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கண்காணிப்பு அலு வலர்/ அரசு செயலர் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு கொ.வீர ராகவ ராவ், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக. பாலாஜி சரவணன், மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தூத்துக் குடி மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன், மாந கராட்சி துணை மேயர் செ.ஜெனிட்டா உட்பட பலர் கலந்து கொண்டனர்.