புதுக்கோட்டை, டிச.29- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையை அடுத்த சத்திரப்பட்டியில் வாழும் பட்டியலின மக்களுக்கான சுடு காட்டுக்கு செல்லும் பாதை தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை செவ்வாய்க்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். கந்தர்வகோட்டை தாலுக சத்திரப் பட்டியில் வசித்து வரும் பட்டியலின மக்கள், தாங்கள் பயன்படுத்தி வரும் சுடுகாட்டிற்கு தனியாக பாதை இல்லை. தனியார் நிலங்களின் வழியாகத்தான் சடலங்களை கொண்டு செல்ல வேண் டிய அவலநிலை தொடர்ந்து வருகிறது. எனவே, தங்களின் சுடுகாட்டிற்கு நிரந்தர மாக பாதை அமைத்துத் தர வேண்டுமென கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரையிடம் மனு கொடுத்து வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து மேற்படி பகுதிக்கு வட்டாட்சியர் புவியரசன், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கார்த்திக்(எ)ரெத்தினவேல் உள்ளிட் டோருடன் எம்எல்ஏ சின்னத்துரை செவ் வாய்க்கிழமை சென்று ஆய்வு மேற் கொண்டார். அப்போது மேற்படி சுடுகாட் டிற்கு நிரந்தரமாக பாதை வேண்டுமா னால் சில தனியாரிடம் நிலத்தை பெற வேண்டிய நிலை இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அதிகாரி கள் மற்றும் சம்மந்தப்பட்ட நிலத்திற்குச் சொந்தமானவர்களிடம் பேசி, விரைவில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்ப டும் என்று அப்பகுதி மக்களிடம் எம்எல்ஏ சின்னத்துரை உறுதியளித்தார்.