districts

img

காஞ்சிபுரம் மாவட்டம் சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவாகவும், சங்கம் வைக்கும் உரிமை, கூட்டுபேர உரிமையை பாதுகாக்க கோரியும் மின் ஊழியர்கள் மற்றும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பாக பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சில் செயலாளர் ரெங்கசாமி, சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.