திருவாரூர், ஜூலை 15 - திருவாரூர் மாவட்டம் குடவா சல் வி.பி.சிந்தன் பேருந்து நிலையம் அருகே நடிகர் சிவாஜி ரசிகர் மன்றத்தின் சார்பாக கல்விக்கண் திறந்த கர்ம வீரர் கு.காமராஜர் 122 ஆவது பிறந்த நாள் விழா இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன் ரசிகர் மன்றத்தின் பொறுப்பாளர் ஹரிதாஸ் தலைமை வகித்தார். மாலதி ஜுவல்லரி உரிமையாளர் மு.தம்பித்துரை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்த கம் மற்றும் எழுது பொருட்கள் வழங்கினார். ஆதித்யா என்டர் பிரஸ் ஆதித்யா பாலு, தேவி விலாஸ் பாலா உள்ளிட்ட வர்த்த கர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பாபநாசம்
தஞ்சாவூர் மாவட்டம் கோவிந் தநாட்டுச்சேரி ஊராட்சி, புத்தூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா நடைபெற்றது. ஊராட்சித் தலைவர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார். இதில் மாணவர்களுக்கு இனிப்பு, நோட்டு, எழுதுப் பொருட்கள் வழங்கப் பட்டன. அய்யம் பேட்டை லயன் சங்கத் தலைவர் விஜயராஜன், செயலர் சுரேஷ், பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜராஜன் பங்கேற்றனர்.
வங்காரம்பேட்டை அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி யில் நடந்த நிகழ்ச்சியில், மாண வர்களுக்கு பேச்சு, ஒப்புவித்தல் போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. இதில் முன்னாள் தலைமையாசிரியர் கிருஷ்ணமூர்த்தி, தலைமையா சிரியர் தீபா மற்றும் ஆசிரியை கள் பங்கேற்றனர்.
பாபநாசம் வித்யா பாடசாலை யில் நடந்த நிகழ்ச்சியில் மாண வர்களுக்கு புத்தகங்கள், இனிப்பு வழங்கப்பட்டன. பாபநாசம் லயன்ஸ் கிளப் தலைவர் செந்தில், செயலர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் காமராஜர் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தலைமை ஆசிரியர் ரமேஷ், ஆசிரியை அமுதா உட்பட மாணவர்கள் பங்கேற்றனர்.
கருத்தரங்கம்
பாபநாசம் அருகே திருக்கருக் காவூரில் சோழன் பள்ளி, அக்கினிச் சிறகுகள் அறக்கட்டளை, தஞ்சாவூர் காஸ்மோஸ் ரோட்டரி சங்கம், பாபநாசம் ரோட்டரி சங்கம் இணைந்து கர்ம வீரர் காமராசர் பிறந்த நாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாள் சிறப்புக் கருத்தரங்கத்தை நடத்தின. தமிழ்ப் பல்கலைக் கழக பதிவா ளர் தியாகராஜன் தலைமை வகித்தார். இதில் உயர் கல்வி மற்றும் நுழைவுத் தேர்வு பற்றி கல்வியாளர் சுமித்திரா, வேலைவாய்ப்பு மற்றும் போட்டித் தேர்வு பற்றி திண்ணைப் பயிற்சிப் பட்டறை செந்தில் குமார் ஆகியோர் பேசினர். இதில் தஞ்சாவூர் எம்.எல்.ஏ நீல மேகம், சோழன் பள்ளி தாளாளர் சிவ சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பொன்னமராவதி
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அமலா அன்னை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கல்வி வளர்ச்சி நாள் விழாவிற்கு பள்ளியின் முதல்வர் மரிய புஷ்பம் தலைமை வகித்தார். தொட்டியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கீதா, முன்னாள் தலைவர் சோலை யப்பன், தொழிலதிபர் கணேஷ் கருப்பையா ஆகியோர் பங்கேற்றனர்.
பள்ளி மாணவ-மாணவி யரின் நாட்டியம் மற்றும் காமரா ஜரின் வாழ்க்கை வரலாறு குறித்த நாடகம் நடைபெற்றது. பள்ளி யின் துணை முதல்வர் பிரிண்ட்ஸ் என்ற இளவரசன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். முன்ன தாக வரலாற்று துறை ஆசிரியர் ரேவதி வரவேற்றார். முதுகலை கணித ஆசிரியர் பாலமுரளி நன்றி கூறினார்.