districts

img

காலநிலை மாற்றத்துக்கு மனித தவறுகளே காரணம்!

நாகர்கோவில், ஏப்.28-  குமரி மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, குமரி மாவட்ட வனக்கோட்டத்துடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு கோடையில் இயற்கை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு முகாமை காளிகேசத்தில் நடத்தின. இதில் 10 பள்ளிகளில் இருந்து தலா  10 மாணவர்களும், ஒரு ஆசிரியரும் பங்கேற்றனர். முகாமில், குமரி மாவட்ட வன அலுவல ரும், வன உயிரின காப்பாளருமான பிரசாந்த்,  மாணவர்களுக்கு இயற்கை பாதுகாப்பு குறித்தும், கால நிலை மாற்றத்தால் ஏற்பட் டுள்ள சூழியல் மாற்றங்கள் குறித்தும் விளக்கிப் பேசினார்.  அப்போது அவர் பேசுகையில், “தற்போது  கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இவ்வளவு அதிகமான வெப்பத்தை அனு பவிக்கும் தலைமுறை நாமாகத்தான் இருப் போம். நமது முன்னோர்கள் இதுபோன்ற வெப்பத்தை அனுபவித்து இருக்க மாட்டார் கள். உங்கள் தாத்தா, பாட்டியிடம் கேளுங் கள். அவர்களுக்கு இப்போதுள்ள கால  சூழ்நிலை, கடுமையான வெப்பம் ஆகியவை  அதிர்ச்சியை கொடுக்கும். வளர்ச்சி என்பது  முக்கியமானதாகும். ஆனால் அதே சமயத் தில் பல்லுயிர் தன்மைகள் பாதுகாக்கப்பட வேண்டும். காலநிலை மாற்றத்துக்கு மனித  தவறுகளே முக்கியம் காரணம்.  எதிர்கால சந்ததிகள் இந்த தவறை செய்யக் கூடாது. காடுகளில்தான் பல்லுயிர்  தன்மை நிலவுகிறது. காடுகளைப் பாதுகாக்க  வேண்டும். மரங்களை வளர்க்க வேண்டும்.  இயற்கையை பாதுகாப்பதற்கு முக்கியத்து வம் அளிக்க வேண்டும். வளங்களை பாது காக்க அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக் கும் ஒத்துழைக்க வேண்டும்” என்றார். முகாமில் குமரி நேச்சர் பவுண்டேசன் அமைப்பினர் வழிகாட்டியாக இருந்து மாண வர்களை காட்டிற்குள் அழைத்துச் சென்று  பல விசயங்களை விளக்கினர். காலநிலை மாற்றம் மற்றும் அதன் தாக்கம் குறித்து,  மாணவர்களுக்கு வினாடி-வினா, புதிர்  போட்டிகள் நடைபெற்றன. இதில் கலந்து  கொண்ட அனைத்து பள்ளி மாணவர்களுக் கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் மற்றும் புத்த கங்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன. அழகியபாண்டியபுரம் வனச்சரகர் மணி மாறன் மற்றும் சரக பணியாளர்கள், மாவட்ட  காலநிலை மாற்ற இயக்க பணியாளர் மற்றும்  அலுவலர்கள் பங்கேற்றனர்.