districts

img

சிபிஎம் மன்னார்குடி ஒன்றியச் செயலாளராக கே.ஜெயபால் தேர்வு

மன்னார்குடி, நவ.11 - மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருவாரூர்  மாவட்டம் மன்னார்குடி ஒன்றிய மாநாடு மன்னார் குடி சிட்டி ஹாலில் நடை பெற்றது.  கே.டி.எம்.நூர்முகமது, மன்னன் மணி, புஷ்பா தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் ஏ.தர்மலிங்கம் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. என்.முருகானந்தம் மாநாட்டை துவக்கி வைத்து  உரையாற்றினார். மன்னார்குடி மாவட்ட  தலைமை மருத்துவமனை யில் காலியாக உள்ள மருத்துவர்கள், செவிலி யர்கள், ஊழியர்கள் பணி யிடங்களை உடனே நிரப்ப  வேண்டும். இந்திய பொது  சுகாதார தரநிலைகளுக் கான   வழிகாட்டுதல்களின் படி மன்னார்குடி அரசு மருத்துவமனையின் மருத்துவ அடிப்படை கட்டு மானத்தை  தரம் உயர்த்த வேண்டும் என்பன  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 9 பேர் கொண்ட புதிய  ஒன்றியக் குழுவும், ஒன்றியச்  செயலாளராக கே.ஜெயபா லும் தேர்வு செய்யப்பட்ட னர். கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே. தமிழ்மணி நிறைவுரையாற்றி னார். முன்னதாக மாநாட்டுக்  கொடியை மூத்த தோழர் எஸ். பொன்னுசாமி ஏற்றினார்.