திருத்துறைப்பூண்டி, நவ.14- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது நகரம் மாநாடு டாக்டர் அம்பேத்கர் சிலையிலிருந்து பேரணியாகப் புறப்பட்டு, நகரத்தின் முக்கிய சாலை வழியாக, தனியார் திருமண மண்டபத்தில் பேரணி வந்து மாநாடு தொடங்கியது. மாநாட்டிற்கு கோதாவரி தண்ட பாணி ஆகியோர் தலைமை தாங்கி னார். எம்பிகே. பாண்டியன் மாநாட்டு கொடியினை ஏற்றினார். எம்.ஜெய பிரகாஷ் அனைவரையும் வரவேற்பு ரையாற்றினார் ஜி.தமிழ்மணி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மத்தியக் குழு உறுப்பினர் பெ. சண்முகம் துவக்க உரை யாற்றினார். 11 நகர குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப் பட்டு, புதிய செயலாளராக கே.கோபு தேர்வு செய்யப் பட்டார். மாநிலக் குழு உறுப்பினர் ஐவி. நாகராஜன் நிறை வுறையாற்றினார். ஆறு வாய்க்கால் தூர்வாருதல், திருத்துறைப்பூண்டி மேம்பாலம் அமைத்தல், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமப்புகளை அகற்றுதல், மாவட்ட தொழில் மையம் மற்றும் தாட்கோ மூலம் விண்ணப்பித்து வங்கிக்கு பரிந்துரைக்கப்பட்ட பிறகும் கடன் வழங்காத வங்கி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்தல் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.