மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரும், சிஐடியு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றியவருமான தோழர் எஸ்.கார்த்திகேயன் கடந்த செப்.7 அன்று காலமானார். இவரது படத்திறப்பு வெள்ளிக்கிழமை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிபிஎம் நகர செயலாளர் ஜி.தாயுமானவன் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி படத்தை திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.தமிழ்மணி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் புகழஞ்சலி செலுத்தினர்.