புதுக்கோட்டை, ஜூன் 21-
வன்கொடுமையினால் பாதிக்கப்படும் மகளிருக்கு மருத்துவ வசதி, சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு உதவி, மனரீதியான ஆலோசனைகள் வழங்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்தின் காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மூத்த ஆலோசகர் பணி 1, கல்வித்தகுதி - முதுநிலை சமூகப் பணி, மருத்துவ உளவியல் 3 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம், மாத தொகுப்பு ஊதியம் ரூ.20,000. வழக்கு பணியாளர் 2, கல்வித்தகுதி - சட்டப்படிப்பு, முதுநிலை சமூகப் பணி பெண் வன்கொடுமை தொடர்பாக 3 ஆண்டு பணிபுரிந்த முன் அனுபவம், மாத தொகுப்பு ஊதியம் ரூ.15,000. பாதுகாவலர் 1, கல்வித்தகுதி - இரண்டாண்டு முன் அனுபவமுள்ள நபர், மாத தொகுப்பு ஊதியம் ரூ.10,000 .
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தங்களது சுய விபரங்களை 5.7.2023 மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், புதுக்கோட்டை என்னும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 04322-222270 எனும் தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.