திருச்சிராப்பள்ளி, ஏப், 30,
திருச்சிராப்பள்ளி பெரியகடைவீதி சந்து கடை பகுதி சௌந்தரபாண்டியன் பிள்ளை தெருவை சேர்ந்தவர் பிரபு இவர் நகைப் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். சனிக் கிழமை இரவு பட்டறையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்று விட்டார். ஞாயிறு அன்று காலை கடையின் அருகில் உள்ள நபர்கள் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்து பிரபுவிற்கு தகவல் தெரிவித்தனர். பிரபு கோட்டை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். காவல்துறையி னர் ஆய்வு செய்தபோது ரூ 50 ஆயிரம் பணம் மற்றும் 10 கிராம் தங்க நகை திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.