திருச்சிராப்பள்ளி, டிச.29 - தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி திருச்சி மாநகர், புறநகர் மாவட்ட குழுக்கள் சார்பில் “சாதியம் தகர்ப்போம், மனிதம் வளர்ப்போம்” என்ற தலைப்பில் வெள்ளியன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சீனிவாசா மஹாலில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு மாநகர் மாவட்டத் தலைவர் கனல் கண்ணன், புறநகர் மாவட்டத் தலை வர் தளுகை முத்துக்குமார் ஆகி யோர் தலைமை வகித்தனர். மாநகர் மாவட்டப் பொருளாளர் ஜோன்ஸ் வரவேற்றார். ‘பஞ்சமி நிலமும், பஞ்சமர் வாழ்வும்’ என்ற தலைப்பில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஜெய சீலன் பேசுகையில், “தமிழகத்தில் ஒன்றரை கோடி அளவில் இருக்கிற ஒடுக்கப்பட்டிருக்கிற, தாழ்த்தப்பட்டிருக்கிற, விளிம்பு நிலையில் உள்ள, புறம் தள்ளப் பட்டுள்ள மக்களின் பொருளாதார வாழ்க்கையை மேம்படுத்துவதற் காக பல்வேறு திட்டங்கள் இந்த நாட்டில் இருக்கின்றன. இச்சட்டங்கள், திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்து வதற்கான களத்தை, போர் முனையை உருவாக்குவதற்கான விழிப்புணர்வை நாம் திருச்சி மண்ணில் உருவாக்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள் கஷ்டப்படு வதற்கு அவர்களுக்கு சொந்தமாக இடம் இல்லை என்பதை அறிந்த வெள்ளைக்கார அரசாங்கம், இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்க ளுக்கு பன்னிரண்டரை (12.1/2) லட்சம் ஏக்கர் நிலத்தை கொடுத் தது. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பன்னிரண்டரை லட்சம் ஏக்கர் நிலம் இப்போது அவர்களிடம் இல்லை. அந்த இடம் எங்கே என்பதுதான் இப்போது உள்ள கேள்வி. இந்த நிலங்களை அதி கார வர்க்கமும், ஆதிக்க சக்தி களும் இன்று வைத்திருக்கிறார்கள். பஞ்சமி நிலங்களை கணக்கெடுப்பது எப்படி? தீண்டாமை ஒழிப்பு முன்னணி நினைத்தால் திருச்சி மாவட்டத்தில் இருக்கிற 403 ஊராட்சிகளிலும் கணக்கெடுக்க முடியும். ஜமாபந்தி தான் ஒடுக்கப் பட்ட மக்களுக்கு பஞ்சமி நிலம் இருக்கிறதா. இல்லையா என்று ஒவ்வொரு ஆண்டும் கணக்கு கொடுக்கிற நாள். அந்த அட்ட வணைக்கு பேர் 14-ஆவது கணக்கு. “2 ஆவது கணக்கையும், 14 ஆவது கணக்கையும் கொடு. அதில் இந்த ஊரில் உள்ள பஞ்சமி நிலத்தின் கணக்கை கொடு, அது வரை போக மாட்டோம்” என, அந்தந்த கிராம சபையை ஒரு போர் முனையாக நாம் பயன்படுத்த முடியும். பஞ்சமி நிலத்தை மீட்பதற் கான போராட்டத்தை, நம் போன்ற சமூக இயக்கங்கள் கையில் எடுத்தால்தான் முடியும். இது குறித்து திருச்சி மாவட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், ஜனநாயக அமைப்புகளும் முடிவு எடுத்து, திட்டமிட்டு எல்லோ ரையும் இணைத்து பட்டியலின மக்களிடம் ஒற்றுமையை உரு வாக்கி, ஜனநாயக இயக்கங்க ளையும் இணைத்து ஒரு போர்க் களத்தை உருவாக்க வேண்டும். அப்படி இருந்தால், தமிழகத் திற்கும், இந்தியாவிற்கும் முன் னோடியாக பஞ்சமி நிலத்தை மீட்க முடியும்; இது தமிழ்நாட்டிற்கு மிகப் பெரிய ஆதார சக்தியாக இருக்கிறது என்ற நிலையை உருவாக்க முடியும்” என்றார். சாதியம் தகர்ப்போம் மனிதம் வளர்ப்போம் என்ற தலைப்பில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் மகேந்திரன் பேசினார். கருத்தரங்கில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநகர் மாவட்டச் செயலாளர் கோவி. வெற்றிச்செல்வன், புற நகர் மாவட்டச் செயலாளர் ரஜினி காந்த் மற்றும் சகோதர இயக்கங் களைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். புறநகர் மாவட்ட பொருளாளர் அருணன் நன்றி கூறினார்.