அரியலூர், டிச.15 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய சாதாரணக்கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய பெருந்தலைவர் ரவி(எ)ரவிசங்கர் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் (கிராம ஊராட்சி), துணைத் தலைவர் லதா கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர. மன்ற பொருட்களை உதவியாளர் மாலதி வாசித்தார். ஒன்றிய குழு உறுப்பினர்கள், குடிநீர், சாலை, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவது குறித்து பேசினர். வட்டார வளர்ச்சி அலுவலர் கஸ்தூரி நன்றி கூறினார்.