districts

img

த.பே.மா.லு கல்லூரியில் ஜமுக்காளப் போராட்டம்

மயிலாடுதுறை, ஆக.11 - மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் த.பே.மா.லு கல்லூரியில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி கருப்பு ஆடை அணிந்து ஜமுக்காள காத்திருப்பு போராட்டம் 3 ஆவது நாளான வெள்ளி யன்றும் நடைபெற்றது. சங்கத்தின் மாநில பொருளாளரும், கிளை தலைவருமான முனைவர் சேவியர் செல்வக்குமார் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் பேராசிரியர் ஸ்ரீதர்  தங்கத்துரை, துணைத் தலைவர்  கோபிநாத்,  இணை செயலாளர் ஷீலா எட்வர்டு, பொரு ளாளர் ஜெயராஜ் உட்பட 50-க்கும் மேற்பட் டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். கோரிக்கைகள் வெற்றி பெறவும் போராட்டத்தை வாழ்த்தியும் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் மண்டல  செயலாளர் மரிய லாசர் உரையாற்றினார்.