திருவாரூர், மே 23-
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஜமாபந்தி நிகழ்ச்சி ஆறு நாட்கள் நடைபெறுகிறது. இதுகுறித்து ஆட்சியர் தி. சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருவாரூர் மாவட்டத்தில் 1432-ம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீா்வாயம் கணக்கு முடித்தல் நிகழ்ச்சி (ஜமாபந்தி) வருகிற 24-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை தவிர மற்ற நாட்கள் நடக்கிறது.
முத்துப்பேட்டை தாலுகாவில் வருகிற 24-ஆம் தேதி மற்றும் 25-ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் ஆட்சியர் தலைமையிலும், நன்னிலம் தாலுகாவில் 24-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை மாவட்ட வருவாய் அலுவ லர் தலைமையிலும், திருவாரூர் தாலுகாவில் 24-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் தலை மையிலும் நடக்கிறது.
கூத்தாநல்லூர் தாலுகாவில், 24-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும், குடவாசல் தாலுகாவில் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர், சிறுபான்மை நல அலுவலர் தலை மையிலும், வலங்கைமான் தாலுகாவில் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியி னர் நல அலுவலர் தலைமையிலும், நீடாமங்க லம் தாலுகாவில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமை யிலும், திருத்துறைப்பூண்டி தாலுகாவில் உதவிஆணையர் (கலால்) தலைமையிலும் நடக்கிறது.
மன்னார்குடி தாலுகாவில் 24-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை மன்னார்குடி வரு வாய் நீதிமன்றம் தனித் துணை ஆட்சியர் தலைமையிலும் நடக்கிறது. இதில் பொது மக்கள் தங்களுடைய கோரிக்கைகள் தொடர் பான மனுக்களை தங்களது தாலுகாவிற் குரிய வருவாய் தீர்வாய அலுவலரிடம் நேரில் அளித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.