இன்று முதல் ஜூன் 27 வரை மயிலாடுதுறையில் ஜமாபந்தி
மயிலாடுதுறை, ஜூன் 11 - மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய நான்கு வட்டங்களிலும் 1433 ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் நடைபெற உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நான்கு வருவாய் வட்டங்களிலும் 1433-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வா யம் ஜூன் 12 (புதன்கிழமை) முதல் 27 வரை நடைபெற உள்ளது, வருவாய் தீர்வாயம் நடத்திட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற உள்ள வருவாய் தீர்வாய விபரம்: சீர்காழி வட்டத்திற்கு வருவாய் தீர்வாய அலுவலராக மாவட்ட ஆட்சியர் ஜூன் 12 முதல் 27 வரையும், மயிலாடு துறை வட்டத்திற்கு வருவாய் தீர்வாய அலுவலராக, மாவட்ட வருவாய் அலுவலர் ஜூன் 12 முதல் 20 வரையும், குத்தாலம் வட்டத்திற்கு, வருவாய் தீர்வாய அலுவலராக, மயிலாடுதுறை வருவாய் கோட்ட அலுவலர் ஜூன் 12 முதல் 20 வரையும், தரங்கம்பாடி வட்டத்திற்கு வருவாய் தீர்வாய அலுவலராக சீர்காழி வருவாய் கோட்ட அலுவ லர் ஜூன் 12 முதல் 21 வரையும் நடத்த உள்ளனர். வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாட்களில் பொது மக்கள் கூட்ட நெரிசலைத் தவிர்த்து, சமூக இடைவெளி விட்டு, வரிசையில் சென்று தங்கள் கோரிக்கை மனுக் களை நேரடியாக வருவாய்த் தீர்வாய அலுவலரிடம் வழங்க அனுமதிக்கப்படுவர். மேலும் பொதுமக்கள் வேளாண்மைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறை, பொதுப்பணி நீர்வள ஆதாரத் துறை, மின்சாரத்துறை சார்ந்த கோரிக்கைகள் தொடர்பாக ஜூன் 12 முதல் ஜூன் 27 வரை விண்ணப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித் துள்ளார்.
அரசு ஐ.டி.ஐ–களில் சேர ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம்
அரியலூர், ஜூன் 11- அரியலூர் மற்றும் ஆண்டிமடம் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில், நிகழாண்டிற்கான மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் ஜூன் 13 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. விண்ணப்பக் கட்டணம் ரு.50-ஐ ஏடிஎம், கடன் அட்டை மற்றும் இணையதளம் வாயிலாக செலுத்த வெண்டும். அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலை யம், ஆண்டிமடம் அரசு தொழிற் பயிற்சி நிலையம், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஆகிய இடங்களில் செயல்படும் சேர்க்கை உதவி மையங்களிலும், தனியார் கணினி மையம் மூலமும் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் தொலைபேசி - 9499055877, 04329-228408, ஆண்டி மடம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் தொலைபேசி 9499055879 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித் துள்ளார்.
பேராவூரணியில் நாளை வருவாய் தீர்வாயம் துவக்கம்
தஞ்சாவூர், ஜூன் 11- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டத்தில் உள்ள, அனைத்து வருவாய் கிராமங்களிலும், கிராம நிர்வாக அலுவலர்களால் பராமரிக்கப்பட்டு வரும் வருவாய் கணக்குகளை தணிக்கை செய்யும் பொருட்டு 1433 ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) பட்டுக் கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ தலைமை யில், பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. ஜூன் 13 (வியாழக்கிழமை) பெருமகளூர் உள் வட்டத்திற் கும், ஜூன் 14 (வெள்ளிக்கிழமை) குருவிக்கரம்பை உள் வட்டத்திற்கும், ஜூன் 18 (செவ்வாய்க்கிழமை) ஆவணம் உள் வட்டத்திற்கும், ஜூன் 20 (வியாழக்கிழமை) பேரா வூரணி உள் வட்டத்திற்கும் நடைபெற உள்ளது. வருவாய் தீர்வாயம் குறிப்பிட்ட நாட்களில் காலை 10 மணிக்கு பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடை பெறும். பொதுமக்கள் தங்களது மனுக்களை, முதல்வரின் முகவரி என்னும் இணையதளத்தில் இணைய வழியா கவோ, cmhelpline-dashboard.tnega என்ற இணையதள முகவரியிலோ அல்லது இ-சேவை மையங்களின் மூல மாகவோ, வருவாய் தீர்வாயத்தில் மனுக்களை பதிவு செய்ய வேண்டும். வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களி டம் பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப் படும் என பேராவூரணி வருவாய் வட்டாட்சியர் தெய்வானை தெரிவித்துள்ளார்.
பறிமுதல் வாகனங்கள் ஜூன் 18-இல் பொது ஏலம்
அரியலூர், ஜூன் 11- அரியலூர் மாவட்டத்தில், மது குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 50 இருசக்கர வாகனங்கள் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஜூன் 18 ஆம் தேதி காலை 10 மணிக்கு பொது ஏலம் விடப்படுகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் உத்தர வின்படி, மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப் பாளர் ஆர்.விஜயராகவன் வழிகாட்டுதலின்படி நடைபெறும் இந்த ஏலத்தில் கலந்து கொள்பவர்கள், ஏலம் விடப்படும் அன்றைய நாளில் காலை 8 மணிக்கு முன்பணம் ரூ.1000 செலுத்தி, தங்களது பெயர்-முகவரியை பதிவு செய்து, ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டும். பதிவு செய்து கொண்டவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டும். பிறருக்கு அனுமதியில்லை. வாக னத்தை அதிகபட்ச விலைக்கு ஏலத்தில் எடுத்தவர்கள் பிற்பகல் 3 மணிக்குள் ஏலத் தொகையுடன், ஜி.எஸ்.டி தொகை முழுவதையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் உரிய தொகையை செலுத்த தவறினால் முன்பணம் திருப்பி தரப்பட மாட்டாது. வாகனத்துடன் ஏலம் எடுத்ததற்கான சான்று மட்டுமே வழங்கப்படும். வாகனத்தின் பதிவு சான்று வழங்க இயலாது. பொது ஏலத்தில் காவல்துறை சார்ந்த எவரும் கலந்து கொள்ள அனுமதியில்லை. வாகனங்களை ஏலம் நடைபெ றும் தேதியன்று காலை 8 மணி முதல் பார்வையிடலாம். ஏல நடவடிக்கைகள் அனைத்தும் ஏலக்குழு அலுவலர்களால் முடிவு செய்யப்படும். ஏலத்தில் கலந்து கொள்ள விரும்பு வர்கள் தங்களது ஆதார் அடையாள அட்டையின் நகலை தவறாமல் கொண்டு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை அணுகலாம்.
நத்தம் நில வரித் திட்ட பட்டா வழங்கலைத் துரிதப்படுத்துக!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
புதுக்கோட்டை, ஜூன் 11 - நத்தம் நிலவரித் திட்டத்தின்கீழ் பட்டா வழங்கும் நடைமுறையைத் துரிதப்படுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக கட்சியின் புதுக் கோட்டை நகரச் செயலாளர் ஆர்.சோலை யப்பன் மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா விடம் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ள தாவது: புதுக்கோட்டை நகரத்தில் குடியிருந்து வரும் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் பல ஆண்டுகளாக வீடு இல்லாமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு குடி மனைப் பட்டா வழங்க வேண்டுமென வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல ஆண்டுகளாகப் போராடி வருகிறது. இந்நிலையில், பல ஆண்டுகளாக நத்தம் புறம்போக்கு நிலத்தில் குடியிருந்து வரும் ஏழைகளுக்கு நத்தம் நிலவரித் திட்டத்தின் மூலம் பட்டா வழங்க தமிழ்நாடு அரசு அறி வித்துள்ளது. அவ்வாறு வழங்கப்பட்ட பட்டாவை இணையத்தில் பதிவேற்றம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், புதுக்கோட்டை நகரத்தின் பல பகுதிகளில் நத்தம் புறம்போக்கில் குடி யிருந்து வரும் ஆயிரக்கணக்கான ஏழை களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. எனவே, நத்தம் புறம்போக்கில் குடியிருக் கும் அனைவருக்கும் நத்தம் நிலவரித் திட்டத் தின் மூலம் உடனடியாக பட்டா வழங்கவும், வழங்கப்பட்ட பட்டாவை உடனடியாக கணினியில் பதிவேற்றம் செய்யவும் நடவ டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்தவர் நெஞ்சு வலியால் மயங்கி உயிரிழப்பு
அரியலூர், ஜூன் 11- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்-கும்பகோ ணம் சாலையில் உள்ள சிலால் மெயின் ரோட்டில் சாலை ஓரமாக சைக்கிளில் வந்த 55 மதிக்கத்தக்க ஒருவர் திடீ ரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். இதனைப் பார்த்த அவ்வழியாக சென்றவர்கள், தா.பழூர் காவல் நிலையத் திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 108 ஆம்பு லன்ஸ்க்கு கொடுத்தனர். அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழி யர்கள் கீழே விழுந்து கிடந்தவரை பரிசோதித்த போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி னர். அதில், உயிரிழந்தவர் ஒக்காநத்தம் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சிநாதன் என்பதும், அவர் பூண்டு வியாபா ரம் செய்து வருவதும் தெரிய வந்தது. கணவன்-மனைவிக் குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக இருக்கும் கொளஞ்சிநாதன், பாண்டிச்சேரி மருத்துவ மனையில் உடற்பரிசோதனை செய்ய தனது கிராமத்தி லிருந்து செவ்வாயன்று அதிகாலை இருசக்கர வாகனத் தில் சென்றுள்ளார். அப்போது மயங்கி விழுந்து உயிரி ழந்தது தெரிய வந்தது.
10 ரூபாய் நாணயம் பயன்பாடு விழிப்புணர்வு
மயிலாடுதுறை, ஜூன் 11- சென்னை மாவட்டத்தைச் தவிர்த்து, 10 ரூபாய் நாண யத்தை ஏனைய மாவட்டங்களில் செயல்படும் எரிபொ ருள் நிலையங்கள், வர்த்தகங்கள், குறிப்பாக வங்கிகளில் ஏற்க மறுப்பதால் 10 ரூபாய் நாணயம் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்திட வசதியாக உள்ளூர் செய்தித் தாளில் விளம்பரம் செய்திட வேண்டும் என சென்னை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மை செயலாளர், ஆணையாளர் ஆகியோரால் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனால், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள எரிபொ ருள் நிலையங்கள், வர்த்தகங்கள் மற்றும் வங்கிகளில் 10 ரூபாய் நாணயத்தினை அனைத்து பொதுமக்களும் பரி வர்த்தனைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.
பணமில்லா பரிவர்த்தனை மூலம் இடுபொருட்கள் விநியோகம்
தஞ்சாவூர், ஜூன் 11- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டார முதன்மை வேளாண்மை விரிவாக்க மையத்தில், பணமில்லா பரி வர்த்தனை மூலம் இடுபொருட்கள் விநியோகம் செய்யும் முறை அமல்படுத்தப்படுகிறது. இதுகுறித்து பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) எஸ்.ராணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “விவசாயிகள் இடுபொருட்கள் பெற விரி வாக்க மையத்திற்கு வரும்போது இடுபொருட்களுக்கான தொகையினை பணமாக வழங்குவதை தவிர்த்து, நெட் பேங்கிங் என்று சொல்லப்படும் இணையவழி வங்கி மூல மாகவோ, மொபைல் பேங்கிங் மூலமாகவோ அல்லது டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலமாகவோ பணப் பரி மாற்றம் செய்து கொள்ளலாம். பணமில்லா பரிவர்த்தனை முறையை பின்பற்றுவ தன் மூலம் ஏடிஎம் சென்று பணம் எடுக்க வேண்டிய அவசி யம் இல்லை. மேலும் பணப் பாதுகாப்பு கிடைப்பதுடன், திருட்டு போன்ற நிகழ்வுகளினால் பண இழப்பு ஏற்படா மல் பாதுகாப்பும் கிடைக்கப் பெறுகிறது. ஆகையால் இந்த பணமில்லா பரிவர்த்தனை முறை ஜூன் மாதத்தில் 30 சதவீதமும், ஜூலை மாதத்தில் 50 சதவீதமும், ஆகஸ்ட் மாதத்தில் 70 சதவீதமும், செப்டம்பர் மாதத்தில் 100 சதவீதமும், பி.ஓ.எஸ் எனப்படும் விற்பனை முனையக் கருவி மூலம் செயல்படுத்தப்படவுள்ளது. விவ சாயிகள் அனைவரும் இந்த பணமில்லா பரிவர்த்தனை முறையைப் பயன்படுத்தி இடுபொருட்களை பெற்றுக் கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளி ஆசிரியர் கொலை
இராமநாதபுரம், ஜூன் 11- இராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றி யத்துக்கு உட்பட்ட கே.பாப்பாங்குளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு இடை நிலை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் கண்ணன்(51). இவர் திங்கட்கிழமையன்று தனது இருசக்கர வாக னத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது மர்ம நபர்கள் இடை மறித்து அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். இது குறித்து கமுதி டிஎஸ்பி இளஞ்செழியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றார்.
மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
இராஜபாளையம், ஜூன் 11- இராஜபாளையம் சிவில் இன்ஜினி யர்கள் சங்கம் மற்றும் ஜேசிஐ ராஜ பாளையம் எக்செல் சங்கம் சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் ராஜபாளையம் பகுதியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இராஜபாளையம் கேசா டி மிர் பள்ளி யில் நடைபெற்ற விழாவிற்கு பள்ளித் தாளா ளர் வைமா திருப்பதி செல்வன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் அருணா தேவி வாழ்த்தி பேசினார். ஜேசிஐ ராஜ பாளையம் எக்செல் தலைவர் சிவராம் குமார், சிவில் இன்ஜினியர்கள் சங்கத் தலை வர் அழகர்சாமி ஆகியோர் சிறந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி னர்.
பாளையம் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர், பணியாளர் நியமித்திடுக!
வாலிபர் சங்கம் கோரிக்கை தேனி, ஜூன் 11- தேனி மாவட்டம், பாளையம் அரசு தாலுகா மருத்துவமனைக்கு தேவையான மருத்துவர், செவிலியர் மற்றும் பணியா ளர்களை நியமிக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பேரவை வலி யுறுத்தியுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் உத்தமபாளையம், தேவாரம் ஏரியா கமிட்டியின் பேரவை உத்தமபாளையத்தில் ஜெகதீஸ்வரன், எஸ் .குமரேசன் ஆகி யோர் தலைமையில் நடைபெற்றது .தீண் டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் சீனிவாசன் வாழ்த்தி பேசினார், மாவட்ட தலைவர் கரன்குமார், செயலாளர் முனீஸ்வரன் ,மாவட்ட முன்னாள் செயலா ளர் இரா.லெனின் ஏரியாக்குழு செயலா ளர் விக்னேசுவரன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் ஏரியாக்குழு துணை தலை வர்களாக பொன்ராஜ், பெருமாள் துணை செயலாளராக பிரபாகரன், திருவின் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.. உத்தமபாளையம் அரசு மருத்துவ மனைக்கு போதுமான மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க வேண் டும், இரத்த வங்கி அமைக்க வேண்டும், நிரந்தர நூலககட்டிடம் , கிராமச்சாவடியில் அண்ணல் அம்பேத்கர் சிலை அமைக்க வேண்டும், தேவாரம் அரசு மருத்துவமனை யில் பிரசவ வார்டை மேம்படுத்த வேண்டும், சாக்குலுத்து மெட்டு சாலை பணியை நிறை வேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.