கரூர், ஜன.17 - பொங்கல் பண்டிகையையொட்டி, கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம் இராச்சாண்டார் திருமலையில் வியாழனன்று ஜல்லிக்கட்டு போட்டியை, மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 63 ஆவது ஆண்டாக நடந்த இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 770 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் அரசு விதிமுறைகளின்படி பதிவு செய்து பங்கேற்றனர். விழாவில் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் இரா.மாணிக்கம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், குளித்தலை சார் ஆட்சியர் தி.சுவாதி, இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்பு) மரு.சாந்தி, ஜல்லிக்கட்டு போட்டி குழுவினர் உட்பட தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.